
விக்கல் என்பது நம் அனைவருக்கும் வரும் ஒரு இயற்கையான அனுபவம். விக்கல் ஏற்படுவதற்கு நம்முடைய டையாஃபிராம் தசைகள் திடீரென சுருங்குவது காரணம். விக்கல் வரும்போது சத்தம் வருகிறது. அதற்கு காரணம் நமது குரல் நாண்கள் சிறிது நேரத்தில் மூடப்படுவதால் தான்.
பொதுவாகவே விக்கல் சில வினாடிகள் அல்லது நிமிடங்களுக்குள்ளே தானாகவே நின்றுவிடும். ஆனால் விக்கல் மீண்டும் மீண்டும் வந்தாலோ அல்லது 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தாலோ அது நல்லதல்ல, கவலைக்குரிய விஷயம். அது உடலில் இருக்கும் பல நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். உங்களுக்கு விக்கல் 48 மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து நீடித்தால் உடனே மருத்துவர் அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
விக்கல் வர காரணங்கள்:
அடிக்கடி விக்கல் ஏற்பட காரணங்கள்:
அடிக்கடி விக்கல் வருவதை நிறுத்த சில குறிப்புகள்:
48 மணி நேரத்திற்கும் மேலாக விக்கல் நீடித்தால் என்ன?
பெரும்பாலான நேரங்களில் விக்கல் சிறிது நேரத்திற்குள் தானாகவே நின்று விடும். ஆனால் உங்களுக்கு விக்கல் வந்தால், அது சுமார் 48 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்தால் அதற்கு கீழே கொடுக்கப்பட்ட சில உடல்நிலை பிரச்சனைகள் தான் காரணம். அவை:
- மூளை மற்றும் நரம்பு பிரச்சனைகள்
- இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகள்
- செரிமான அமைப்பு பிரச்சனைகள்
- புற்றுநோய்
உங்களுக்கு 48 மணி நேரத்திற்கும் மேலாக விக்கல் நிற்காமல் தொடர்ச்சியாக வந்தால் தூங்குவது, சாப்பிடுவது மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இதுதவிர மார்பு வலி, வாந்தி, காய்ச்சல் மற்றும் நரம்பு பலவீனம் பூஞ்ச அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.
முக்கிய குறிப்பு :
விக்கலை போக்க பயமுறுத்துவார்கள் அல்லது அதிர்ச்சி தரும் விஷயத்தை சொல்லுவார்கள். ஆனால் இப்படி செய்வது வேலை செய்யும் என்றாலும், சில சமயங்களில் இதயம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். ஆகவே, இது மாதிரியான காரியங்கள் செய்வதை தவிர்ப்பது தான் உங்களுக்கு நல்லது.