இந்த பச்சை இலைகளை தினமும் சாப்பிட்டால் 60 வயசானாலும் நோய் உடம்புல ஒரு வலி இருக்காது!!

By Ma riyaFirst Published Jun 6, 2023, 1:47 PM IST
Highlights

நிலவேம்பு மூலிகையின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.

ஆயுர்வேதத்தில் பல வகையான நோய்களுக்கு பக்கவிளைவு இல்லாமல் மருந்துகள் உள்ளன. மூலிகை தாவரங்கள் நம்முடைய உடல்நலத்தை பேணி பாதுகாக்க உதவுகின்றன. நிலவேம்பும் அப்படிகான மூலிகைத் தாவரம் தான். இது பல நோய்களைக் குணப்படுத்தப் பயன்படும் அத்தகைய மூலிகையாகும். எந்தெந்த நோய்களுக்கு நிலவேம்பு மூலிகை பயனளிக்கும் என்பதை இங்கு காணலாம். 

நிலவேம்பு மூலிகை கசப்பு சுவை கொண்டது. நீர்க்கோவை, மயக்கம் ஆகிய உடல்நல பிரச்சனைகள் சரியாகும். அஜீரண கோளாறு குணமாகும். இந்த இலைகள் மலமிளக்கும் என்பதால் மலச்சிக்கல் சரியாகும். நிலவேம்பு இலைகள் பசியை ஏற்படுத்தும்.

உடல் வலி: 

நமக்கு பல சமயங்களில் உடம்பில் வலி அதிகமாகிவிடும். அதை தாங்க முடியாமல், அவதிபடுவோம். உடல் வலியை குறைக்க பலர் ஓய்வெடுத்துக் கொண்டாலும், வலியில் இருந்து உனடி நிவாரணம் கிடைக்காது. அப்படிப்பட்ட நேரத்தில் நிலவேம்பு இலைகளை சாப்பிடலாம். ஏனெனில் இது வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளது. ஆகவே வீக்கம் மற்றும் இரும்புச்சத்து நீக்குகிறது.

அஜீரணம்:

இந்தியாவில் நொறுக்குத் தீனிகளை உண்ணும் போக்கு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக உடல் அமைப்பு மோசமடைகிறது. மலச்சிக்கல், வாயு பிரச்சினைகள் வராலம். அவற்றைப் போக்க தினமும் நிலவேம்பு உண்ண்லாம். நாளின் போது எடுத்துக் கொள்ளலாம்.

கல்லீரல் நோய்: 

கல்லீரல் நமது உடலின் மிக முக்கியமான உள்ளூறுப்பு பகுதியாகும். அதே நேரம் உடலின் பல செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, அதனால்தான் இந்த உறுப்பின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. நீங்கள் தொடர்ந்து நிலவேனொ ல்ல்ல்ல்ல்ல்ல்க் உட்கொண்டால், கல்லீரல் நோய் அபாயம் பெருமளவில் குறையும். 

இதையும் படிங்க: கோகம் பழம் கேள்விபட்டிருக்கீங்களா? இதனுடைய பழச்சாறு 1 டம்ளர் குடிச்சா போதும், புற்றுசெல்கள் கூட காணாம போய்டும்

தொற்றுநோய்: 

பல வகையான நோய்த்தொற்றுகளிலிருந்து நிலவேம்பு நம்மைக் காக்கும் சிலவேம்பில் ஆன்டி-பயாடிக் பண்புகள் காணப்படுகின்றன, ஆகவே காய்ச்சல், காய்ச்சல் தொட்ர்பான பருவகால நோய்கள் தடுக்கப்படுகின்றன. தொண்டை நோய்த்தொற்றில் கூட நிலவேம்பு நன்கு செயல்படும். 

புற்றுநோய்: 

புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோயாகும். ஆனால் ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால், அதை கட்டுக்குள் வைக்க முடியும். நிலவேம்பு மூலிகையின் இலைகளை தொடர்ந்து உண்பதால் புற்றுநோயின் ஆபத்து படிப்படியாக குறையத் தொடங்குகிறது. 

எப்படி உண்பது? 

நிலவேம்பு மூலிகை தாவரத்தின் வேரைக் கொண்டு கஷாயம் தயாரித்து காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். 

இதையும் படிங்க: ஒரே ஒரு குடைமிளகாய் இருந்தால் போதுமே! கோடைகாலத்தில் இத்தனை நோய்கள் வராமல் தடுக்க முடியும்!!

 

click me!