தீராத மலச்சிக்கல் பிரச்சினையா? அருமையான வீட்டு வைத்தியம் இதோ..!!

By Kalai SelviFirst Published Jun 3, 2023, 12:22 PM IST
Highlights

நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையால் வேதனைப்படுகிறீர்களா? இப்பிரச்சினையில் இருந்து விடுபட சோம்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

பெரும்பாலும் நாம் வாய் புத்துணர்ச்சிக்காக மட்டுமே சோம்பு பயன்படுத்துகிறோம். அதுபோலவே, சில வீடுகளிலும், உணவகங்களிலும் இன்றளவும் உணவு சாப்பிட்ட பிறகு சிறிதளவு சோம்பு சாப்பிடுவது வழக்கத்தி உள்ளது. மேலும்ல் இது சைவ மற்றும் அசைவ சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையை கூட்டுவது மட்டுமின்றி, பல மருத்துவ குணங்களும் இதில் நிறைந்துள்ளது.

சோம்பில், தாமிரம், பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம், மாங்கனீசு, வைட்டமின் 'சி', இரும்பு சத்து, செலினியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இது வளர்ச்சிதை மாற்றம் மற்றும் சீரான செரிமானத்திற்கும் உதவுகிறது. இவற்றின் மூலம் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் சிறப்பாக நடைபெறும். அதுபோலவே இது, அதிகப்படியான பசி உணர்வை குறைத்து உங்கள் எடை இழப்புக்கு உதவுகிறது. இதில் உண்மை என்னவென்றால், சோம்பு தண்ணீர் குடலை சுத்தப்படுத்தவும், நாள்பட்ட மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் உதவுகிறது.

மலச்சிக்கல் பிரச்சனையால் வேதனைப்படுகிறவர்கள் சோம்பு தண்ணீர் குடித்தால் மிகவும் நல்லது. இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மட்டுமின்றி, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் பண்புகளும் நிறைந்துள்ளது. இது சீரான செரிமானத்திற்கு வழிவகுத்து மலம் கழிப்பதை எளிதாக்குகிறது. சில வீட்டு வைத்தியம் முறையில் தீர்க்கலாம். 

இதையும் படிங்க: மருமகள் தாய்ப்பாலை சுவைக்க விரும்பும் வக்கிர மாமனார்! திருட்டுத்தனமாக அவர் செய்யும் காரியத்தால் மருமகள் ஷாக்!!

சோம்பு தண்ணீர் தயாரிக்கும் முறை:

  • ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து அதை அடுப்பில் வைக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்த பின் அதை ஒரு கிளாஸில் வடிகட்டவும்.
  • நீங்கள் குடிக்கும் சூட்டில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய்யை அதில் சேர்க்கவும். உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக இருந்தால், விளக்கெண்ணெயை இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்.
  • அதன் பின் அவற்றில் அரை எலுமிச்சை பழசாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும். பின் குடிக்கவும்.
  • இந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
  • இது குடித்த அரை மணி நேரத்தில் உங்களது மலச்சிக்கல் பிரச்சனை நீங்குவதோடு மட்டுமல்லாமல், உங்கள் வயிறு சுத்தமாவதை நீங்கள் உணரலாம். 
  • இதனை அடிக்கடி குடிக்க கூடாது. மிகவும் தீவிரமாக மலச்சிக்கல் பிரச்சனை இருக்குக் போது மட்டுமே, இதை குடிக்கவும்
  • குறிப்பாக இதை விடுமுறை நாட்களில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால், இது குடித்த பின் 
  • சிலருக்கு 2 அல்லது 3 முறை வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அப்போது அவர்கள் ஒரு டம்ளர் தயிர் எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக தயிர் புளிப்புடன் இருக்கக் கூடாது.
click me!