உப்பில் மறைந்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து.. வேகமாக அதிகரிக்கும் நோய் பாதிப்பு.. ஷாக் தகவல்

Published : Sep 25, 2023, 09:01 AM ISTUpdated : Sep 25, 2023, 09:02 AM IST
உப்பில் மறைந்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து.. வேகமாக அதிகரிக்கும் நோய் பாதிப்பு.. ஷாக் தகவல்

சுருக்கம்

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழிக்கு ஏற்ப உணவு சமைக்க உப்பு அத்தியாவசியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பல வகையான உணவுகள் மற்றும் பலதரப்பட்ட சுவைக்கு பெயர் பெற்ற நாடான இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாக இதயம் தொடர்பான நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முதன்மையான ஒன்று உப்பு தான்.. ஆம் அதிகமாக உப்பு உட்கொள்வதால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழிக்கு ஏற்ப உணவு சமைக்க உப்பு அத்தியாவசியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உப்பு என்பது உணவின் சுவையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அத்தியாவசிய தாதுக்களையும் கொண்டுள்ளது. இருப்பினும், உப்பை அதிகமாக உட்கொள்வது இதய நோய், பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

இதய ஆரோக்கிம் பாதிப்பு

நாம் உட்கொள்ளும் போது, உப்பு உடலில் திரவ சமநிலையை பராமரிப்பதிலும் நரம்பு தூண்டுதல்களை கடத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், அதிகப்படியான நுகர்வு உடலில் நீர் தக்கவைப்புக்கு வழிவகுக்கும், இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். காலப்போக்கில், இதயம் மற்றும் தமனிகளில் இந்த அழுத்தம் இதய நோய்க்கு வழிவகுக்கும். துரதிருஷ்டவசமாக, இந்திய உணவில் மசாலா பொருட்கள் அதிகமாக பெரும்பாலும் உப்பு அதிகமாக உள்ளது.

நீங்கள் தினமும் ஏன் சிக்கன் சாப்பிடக்கூடாது என்பதற்கான உண்மையான காரணம் இதுதான்..

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் ஏற்படும் மரணத்திற்கு இதய நோய் முக்கிய காரணமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய உணவுகளில் உப்பின் கலாச்சார மற்றும் சமையல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, உப்பு நுகர்வைக் குறைப்பது ஒரு நேரடியான தீர்வு அல்ல. ஆனாலும் கூட, இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் ஆரோக்கியமான மாற்றுகளை ஊக்குவிக்க வேண்டும்.

 அதிக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் இதய நோய்களின் ஆபத்தை குறைக்க, மிதமான அளவில் உப்பை உட்கொள்வது நல்லது. சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் இதய நோய்களின் தாக்குதலைத் தடுப்பதற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

அதிகளவு உப்பு உட்கொள்ளல் என்பது, இந்தியாவில் ஒரு பொதுவான ஆரோக்கிய ஆபத்தாக மாறியுள்ளது. எனவே ஆரோக்கியமான மாற்றுகளைத் தழுவி, ஆரோக்கியமான உணவுத் தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதன் மூலம், இந்த இதய நோய்களின் ஆபத்தை வெகுவாக குறைக்க முடியும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்
Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!