பன்னீர் வச்சி இப்படி ஒருமுறை மசாலா செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு செமையா இருக்கும்!

By Kalai SelviFirst Published Sep 3, 2024, 6:30 AM IST
Highlights

Paneer Rajma Masala Recipe  : இந்த கட்டுரையில் பன்னீர் ராஜ்மா மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இன்று காலை உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்கள், ஆனால் அதற்கு சைடு டிஸ் என்ன செய்வது என்று தெரியவில்லையா? அதுவும் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில், வித்தியாசமான சுவைகள் ஏதாவது செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது. 

உங்கள் வீட்டில் பன்னீரும் ராஜ்மாவும் இருக்கிறதா? அப்படியானால் இவை இரண்டையும் வைத்து சூப்பரான ரெசிபி செய்து சாப்பிடுங்கள்.  முக்கியமாக, இது ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது. ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுங்கள். ரொம்பவே, விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். மேலும், இந்த ரெசிபியை பேச்சிலர்கள் கூட செய்து சாப்பிடலாம். அந்த அளவிற்கு இந்த ரெசிபி செய்வது அவ்வளவு எளிதாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் பன்னீர் ராஜ்மா மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Latest Videos

இதையும் படிங்க:  இரவு சப்பாத்திக்கு ஒன் டைம் கடாய் பன்னீர் கிரேவி செய்து சாப்பிடுங்க.. அடிக்கடி செய்வீங்க!!

பன்னீர் ராஜ்மா மசாலா செய்ய தேவையான பொருட்கள் :

பன்னீர் - 150 கிராம் (துண்டுகளாக்கியது)
ராஜ்மா - 1 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
உப்பு  - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  மீந்து போன சப்பாதியும், பன்னீரும் வச்சி இப்படி ஒரு டைம் டிபன் செய்ங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க!

செய்முறை :

பன்னீர் ராஜ்மா மசாலா செய்ய முதலில், குக்கரை அடுப்பில் வைத்து அதில் கழுவி வைத்த ராஜ்மாவை போடவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி, சுமார் 3 விசில் விட்டு இறக்கவும். குக்கரில் விசில் போன பிறகு ராஜ்மாவையும், தண்ணீரையும் தனி தனி பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மிக்ஸி ஜாரில் வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு அரைத்து வைத்த வெங்காய விழுதை அதில் சேர்த்து சுமார் 2 நிமிடம் வதக்கவும். வதக்கும் போது அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். வெங்காய விழுதை நன்கு வதக்கிய பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அதில் அரைத்து வைத்த தக்காளியையும் சேர்த்து சுமார் 2 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். முக்கியமாக மசாலாவில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

இதனை அடுத்து அதில் நறுக்கி வைத்த பன்னீரை சேர்த்து சுமார் ஐந்து நிமிடம் வதக்கவும். பிறகு அதில் வேகவைத்த ராஜ்மா நீரை ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்க விடுங்கள். தண்நீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் கரம் மசாலா மற்றும் வேக வைத்த ராஜ்மாவை சேர்த்து சுமார் பத்து நிமிடம் கொதிக்க விடுங்கள். அவ்வளவுதான் இப்போது தண்ணீர் ராஜ்மா மசாலா தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!