
புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் பகல் முழுவதும் உணவு ஏதும் சாப்பிடாமல் இருப்பதால் அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக மாலை இஃப்தாரின் போது ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். அதில் முதல் இடம் பெறுவது நோன்பு கஞ்சி தான். இது ஊட்டச்சத்து நிறைந்த ஒரு உணவு. நோன்பின் போது நீண்ட நேரம் காலியாக இருக்கும் வயிற்றுக்கு இதைச் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சக்தி, நீர் இழப்பு மற்றும் பசியை சமநிலைப்படுத்த உதவுகிறது. இந்த நோன்பு கஞ்சியை வீட்டில் சுலபமாக செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1/2 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கோழி/மட்டன் (விருப்பப்படி) - 1/2 கப்
தேங்காய் பால் - 1/2 கப்
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
குருமா மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் அல்லது நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உலர் அத்திப்பழம் சூப்பர் ஃபுட்....எப்படின்னு தெரியுமா ?
தயாரிக்கும் முறை :
- முதலில், அரிசியும் பருப்பும் நன்றாக கழுவி தனியாக வைக்கவும்.
- ஒரு பெரிய கடாயில் அல்லது குக்கரில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- வெங்காயம் வதங்கிய பிறகு, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசிக்க வதக்கவும்.
- மிளகுத்தூள், குருமா மசாலா, உப்பு சேர்த்து கிளறவும்.
- கழுவிய அரிசி மற்றும் பருப்பை சேர்த்து, 3-4 கப் தண்ணீர் ஊற்றி கிளறவும்.
- குக்கரை மூடி போட்டு, 3 விசில் வரும் வரை மிதமான தீயில் வேக விடவும்.
- விரும்பினால் இறைச்சியை சேர்த்து 5 நிமிடம் வேக விடலாம்.
- இறுதியாக தேங்காய் பால், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும். சூப்பரான நோன்பு கஞ்சி தயாராகிவிட்டது!
நோன்பு கஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள் :
- இதில் உள்ள பருப்பு, அரிசி, மற்றும் தேங்காய் பால் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து அளிக்கின்றன.
- நோன்பு திறந்தவுடன் செரிமானத்திற்கு எளிதாக இருக்கும் உணவை உட்கொள்வது முக்கியம். கஞ்சி இதற்கு சிறந்த தேர்வாகும்.
- நீண்ட நேரம் உணவு இல்லாததால் நீர் இழப்பு ஏற்படலாம். தேங்காய் பால் சேர்த்ததால், உடலில் நீர்ச்சத்து நன்றாக உள்ளடங்கும்.
- நோன்பின் போது உடல் சோர்வாக இருப்பதால், இது உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
குழந்தைகளின் டயட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய சத்தான உணவுகள்
நோன்பு கஞ்சி பரிமாறும் முறை :
- இது உலர்ந்த பரோட்டா, சாமோசா, வடை, பஜ்ஜி போன்ற சிற்றுண்டிகளுடன் சேர்த்து பரிமாறலாம்.
- ஒரு கப் சுத்தமான நீர் அல்லது பழச்சாறு கூட இதில் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்.
- கூடவே தேங்காய் சட்னி அல்லது பிரட்டிய இறைச்சி கூட வழங்கலாம்.