இத்தொகுப்பில் பன்னிரால் செய்யப்பட்ட அல்வாவை பற்றி பார்க்கலாம். இது குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மிகவும் நல்லது. இதில் புரதம் உள்ளது.
அல்வா எல்லாருக்கும் மிகவும் பிடித்த இனிப்பு ஆகும். பனீரால் செய்யப்பட்ட அல்வாவையும் சுவைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இது அல்வாவின் பல வகைகளில் ஒன்றாகும். இந்த இனிப்புகளில் நல்ல அளவு புரதம் உள்ளது. இது பன்னீர் மற்றும் பாலில் செய்யப்படும் மிகவும் சுவையான உணவு. இது குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நல்லது. இதோ பனீர் அல்வா செய்முறை..
பனீர் அல்வா செய்ய, முதலில் பனீரை எடுத்து துண்டுகளாக நறுக்கவும்.
இப்போது அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
ஒரு கடாயை எடுத்து மிதமான தீயில் சூடாக்கவும், அதில் நெய் சேர்க்கவும். நெய் உருகியதும், அதில் துருவிய பனீரைப் போட்டு சிறிது நேரம் வறுத்து, கரண்டியால் கிளறவும். அது வெளிர் பழுப்பு நிறமாக மாறியதும், அதில் பால் சேர்க்கவும்.
பால் மற்றும் பனீர் இரண்டும் நன்கு வெந்த பின் உங்கள் சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்; பின்னர் கடாயை மூடி, அல்வாவை 5 நிமிடம் சமைக்கவும்.
அல்வாவை அவ்வப்போது இடையிடையே கிளறிக்கொண்டே இருங்கள். அதனால் அது கடாயின் அடிப்பகுதியில் ஒட்டாது. பால் முழுவதுமாக வற்றும் வரை ஹ
அல்வாவை கிளறிக்கொண்டே இருங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பின் ஸ்டவ் அணைத்து, அதில் ஏலக்காய் தூள் மற்றும் நறுக்கிய பாதாம் சேர்த்து, நன்கு கலக்கவும்.
சிறிது ஆறிய பிறகு, உங்கள் பனீர் அல்வாவை ஒரு பாத்திரத்தில் பரிமாறவும், பாதாம் பருப்பால் அலங்கரிக்கவும்.