ருசியான சுவையில் 'முந்திரிக் குழம்பு' இப்படி செய்ங்க வீடே மணக்கும்..ரெசிபி இதோ..!!

Published : Jan 31, 2024, 03:30 PM ISTUpdated : Jan 31, 2024, 03:52 PM IST
ருசியான சுவையில் 'முந்திரிக் குழம்பு' இப்படி செய்ங்க வீடே மணக்கும்..ரெசிபி இதோ..!!

சுருக்கம்

இத்தொகுப்பில், சுவையான முந்திரி குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

முந்திரி உலர் பழங்களில் ஒன்றாகும். இது இந்திய சமையலில் சில உணவுகளில் பேஸ்டாகவோ அல்லது கிரீமியாகவோ சேர்க்கப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் சில ரெசிபியின் திடத்தை அதிகரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முந்திரியை முக்கிய மூலப் பொருளாக வைத்து சமைப்பது அரிது. எனவே இத்தொகுப்பில், சுவையான "முந்திரி குழம்பு" எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

முந்திரி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
முந்திரி - 1கப்
சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - அரை கப்
தக்காளி - 5
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
புளி - சிறிதளவு
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
பட்டை - சிறு துண்டு
இலவங்கம் - 2
ஏலக்காய் - 1
உப்பு, எண்ணெய், தேங்காய், கறிவேப்பிலை - தேவையான அளவு

இதையும் படிங்க:  குழந்தைக்கு காலை உணவாக 'பீட்ரூட் இட்லி' செஞ்சு கொடுங்க.. சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்!

முந்திரி குழம்பு செய்முறை:

  • முந்திரி குழம்பு செய்ய முதலில், வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை பொடியாக நறுக்க வேண்டும். பின் எடுத்து வைத்த புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்கு சூடானதும் அதில் கடுகு போட வேண்டும். கடுகு நன்கு பொறிந்ததும், வெந்தயம், சீரகம், சோம்பு, பட்டை, இலவங்கம், ஏலக்காய் ஆகியவற்றை அதில் சேர்க்க வேண்டும்.
  • பிறகு அதில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். நீங்கள் விரும்பினால் 20 அல்லது 25 முந்திரியை இவற்றுடன் சேர்த்து வதக்கலாம்.

இதையும் படிங்க:  கமகமக்கும் வாசனையில் 'பக்கோடா குழம்பு' ..கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.. ரெசிபி இதோ!!

  • வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் இப்போது அதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்க வேண்டும். தக்காளி நன்கு மசிந்ததும் புளிக்கரைசலை அதில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்
  • மறுபுறம், முந்திரியுடன் தேங்காய் துருவலை சேர்த்து மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து எடுத்து  கொள்ளுங்கள். அரைத்த இந்த கலவையை குழம்பில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு நன்றாக வெந்ததும் அவற்றை இறக்கிவிடவும். அவ்வளவுதான் இப்போது கமகமக்கும் வாசனையில் சுவையான முந்திரிக் குழம்பு ரெடி..!!

சூடான சாதத்துடன் இந்த முந்திரி குழம்பை ஊற்றி சாப்பிடும் போது அதன் சுவையை சொல்ல வார்த்தையே இல்லை...அப்படி இருக்கும் அதன் சுவை... இந்த ரெசிபியை கண்டிப்பாக நீங்களும் செய்து, உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

பானிபூரி சாப்பிட முயன்ற பெண் திறந்த வாயை மூட முடியாமல் தவிப்பு.. ஷாக்கிங் வீடியோ!
சாம்பாரை கண்டுபிடித்த ஊர் தஞ்சாவூர்..! சசி தரூர் சொன்ன சாப்பாட்டு மேட்டர்!