முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மறைய உருளைக்கிழங்கு சாறு!! 1 ஸ்பூன் போதும்

Published : Jun 20, 2025, 06:13 PM IST
Try Potato Face Pack for Dry Skin

சுருக்கம்

முகத்தில் இருக்கும் பருக்கள் கரும்புள்ளிகளை இயற்கையாகவே நீக்க உருளைக்கிழங்கை எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

பொதுவாக எல்லாருமே முகம் பார்ப்பதற்கு எப்போதுமே பளபளப்பாகவும், இளமையாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் முக அழகை கெடுக்கின்றன. இதற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக இயற்கையாகவே முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்க உருளைக்கிழங்கு சாற்றை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்.

உருளைக்கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நிறமிகளை நீக்கவும், முகப்பரு பிரச்சனையை குறைத்து முக அழகை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. மேலும் முகத்திற்கு பொலிவை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

முகத்திற்கு உருளைக்கிழங்கு சாறு பயன்படுத்தும் முறை:

இதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து உங்களது முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். சிறந்த முடிவுகளுக்கு இந்த வீட்டு வைத்தியத்தை வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்தலாம்.

வயதான அறிகுறிகள் நீங்க உருளைக்கிழங்கு சாறு பயன்படுத்துவது எப்படி?

உருளைக்கிழங்கு சாற்றில் இருக்கும் பண்புகள் முன்கூட்டியே வயதாவதை தடுக்க உதவுகிறது. இதற்கு ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து அந்த பேஸ்ட்டை உங்களது முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

முக அழகை அதிகரிக்க..

உருளைக்கிழங்கு சாறு ஒரு இயற்கையான பிளீச்சிங் முகவராக செயல்படுவதால் இது சரும பராமரிப்பில் எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் முகத்தின் அழகை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி சூரிய ஒளியால் ஏற்படும் தோல் பதனிடுதல், முகப்பரு, வயதான அறிகுறிகள் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை நீக்குவதில் உருளைக்கிழங்கு சாறு முக்கிய பங்கு வகிக்கின்றது. உருளைக்கிழங்கு சாட்சி இருக்கும் ஸ்டார் சருமத்தை பிரகாசமாகும்.

உருளைக்கிழங்கு சாறு மற்றும் மஞ்சள் :

ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் உருளைக்கிழங்கு சாறு சேர்த்து பேஸ்ட் போலாக்கி அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த வீட்டு வைத்தியத்தை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் சருமம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க
Winter Skincare : முகத்திற்கு லெமன் ஜுஸ் தடவலாமா? குளிர்கால சரும பராமரிப்பு 'இது' முக்கியம்