வெளிநாட்டவர்கள் மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்காவிற்குள் வரும் போதும், செல்லும் போதும், தங்களது புகைப்படங்கள் மற்றும் கைரேகை உள்ளிட்ட உயிர் அளவீட்டு (Biometric) விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நடைமுறை முன்பு அமெரிக்காவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது நாட்டின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
முன்பு 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 79 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய விதியின் கீழ், இந்த விலக்கு நீக்கப்பட்டு, இந்த உயிர் அளவீட்டுத் தரவு சேகரிப்பு அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.