பலுசிஸ்தானைச் சேர்ந்த மக்களை, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாகக் கருதாமல் தனித்தனியே சல்மான் கான் குறிப்பிட்டது, சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பலுசிஸ்தானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. இந்நிலையில், சல்மான் கான் அதை ஒரு தனி நாடு போலக் குறிப்பிட்டது பிரிவினைவாதத்தை ஆதரிப்பது போல உள்ளது என்று பலரும் விமர்சித்துள்ளனர்.
பத்திரிகையாளர் ஸ்மிதா பிரகாஷ் எக்ஸ் தளத்தில், "இது ஆச்சரியமாக இருக்கிறது! சல்மான் கான் பலுசிஸ்தானைச் சேர்ந்த மக்களை, பாகிஸ்தானில் இருந்து தனியாகப் பிரிந்துப் பார்க்கிறார்," என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர், "சல்மான் கானின் வாய் தவறிப் பேசிவிட்டாரா அல்லது பலுசிஸ்தான் சுதந்திரம் அடைந்துவிட்டது என்று கூறும் உள்நோக்கம் இருக்கிறதா? அதுவும் அமீர்கான், ஷாருக்கான் அருகில் இருக்கையில் ஏன் இப்படிப் பேச வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.