ரூ.60 லட்சம் வீடு முதல் 25 லட்சம் பணம் வரை! சூப்பர் சிங்கர் வின்னர்ஸுக்கு வாரிவழங்கப்பட்ட பரிசுகள் என்னென்ன?

Published : Jun 25, 2023, 10:15 PM IST

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அருணா, பிரியா ஜெர்சன் மற்றும் பிரசன்னா ஆகியோர் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர்கள் பெற்ற பரிசு தொகை பற்றி தற்போது பார்க்கலாம்.

PREV
14
ரூ.60 லட்சம் வீடு முதல் 25 லட்சம் பணம் வரை! சூப்பர் சிங்கர் வின்னர்ஸுக்கு வாரிவழங்கப்பட்ட பரிசுகள் என்னென்ன?
super singer

விஜய் டிவியில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது சூப்பர் சிங்கர். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழகமெங்கும் பல்வேறு மாவட்டங்களில் ஆடிஷன்கள் நடத்தப்பட்டு அதில் தேர்வான டாப் 20 போட்டியாளர்களை வைத்து இந்நிகழ்ச்சி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசன் 20 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது.

இந்த 20 பேரில் இருந்து அருணா, பூஜா, அபிஜித், பிரசன்னா, பிரியா ஜெர்சன் ஆகிய 5 போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இந்நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று நடத்தப்பட்டது. சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியின் பைனலுக்கு சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வந்திருந்தார். இறுதிப்போட்டியில் போட்டியாளர்களின் அசத்தலான திறமையை பார்த்து ஹாரிஸ் ஜெயராஜ் வியந்து போனார்.

24
super singer

இறுதியாக மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் வெற்றிபெற்றவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அருணா அறிவிக்கப்பட்டார். அதிகப்படியான வாக்குகளை பெற்ற அருணா முதலிடத்தை பிடித்ததோடு மட்டுமின்றி அவருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. அருணாவுக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் ரூ.10 லட்சம் பணமும் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... விஜய் டிவி சூப்பர் சிங்கர்... முதல் முறையாக டைட்டில் வென்ற பெண்... பூஜாவா, அருணாவா?

34
super singer

இதையடுத்து தன்னுடைய தனித்துவமான குரலால் ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக வலம் வந்த பிரியா ஜெர்சன் இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இந்த பரிசுத் தொகையை வழங்கினார்.

44
super singer

மூன்றாம் இடம் பிரசன்னாவுக்கு கிடைத்தது. சூப்பர் சிங்கரின் பல அசத்தலான பாடல்களை பாடி இருந்த பிரசன்னாவுக்கு குறைவான வாக்குகளே கிடைத்ததன் காரணமாக அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது. அவருக்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த சீசனின் மூலம் சோசியல் மீடியாவில் மிகவும் டிரெண்டான போட்டியாளர் என்றால் அது பூஜா தான். அவர் நிச்சயம் பைனலில் டாப் 3-ல் ஏதாவது ஒரு இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரால் டாப் 3-ல் இடம்பெற முடியாமல் போனது. இதனால் பூஜாவின் ரசிகர்கள் சோகமடைந்து உள்ளனர்.

இதையும் படியுங்கள்... ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடியதால் வாய்ப்பளிக்க மறுத்த இசைஞானி... இளையராஜா மீது பாடகி மின்மினி பரபரப்பு புகார்

click me!

Recommended Stories