Siragadikka Aasai : மனோஜுக்கு வில்லியாக மாறிய விஜயா... வக்கீல் பார்த்த கோல்மால் வேலை

Published : May 16, 2026, 08:54 AM IST

Siragadikka Aasai Serial Today Episode : விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜும் ரோகிணியும் ஷோரூமில் பேசிக் கொண்டிருந்த விஷயம் விஜயாவுக்கு தெரியவந்துள்ளது.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் ஷோரூமில் தங்கியிருந்த விஜயாவை அண்ணாமலை பேசி சமாதானப்படுத்தி மீனாவின் அம்மா வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். இங்கு வந்ததில் இருந்தே திமிர்த்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார் விஜயா. ஆனால் அதையெல்லாம் சகித்துக் கொண்டு மீனாவின் குடும்பத்தார் அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார்கள். மறுபுறம் முத்து, வீட்டை எப்படியாவது மீட்க வேண்டும் என பிளான் போட்டுக் கொண்டிருக்க, அவருக்கு ஒரு நண்பர் மூலம் வீட்டை மீட்கும் வாய்ப்பு வந்துள்ளது. இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : பைனான்சியருக்கு ஆப்பு... வீட்டை மீட்க முத்துவுக்கு கிடைத்த புது ரூட்

25
விஜயாவின் பில்டப்

விஜயாவிடம் மீனாவின் அம்மா, காலை டிபனுக்கு பூரி செய்யவா என கேட்க, அதற்கு அவர் நீங்க பழைய எண்ணெய்யை யூஸ் பண்ணுவீங்களா, அது எனக்கு ஒத்துக்காது என சொல்கிறார் விஜயா. அதற்கு அவர் புது எண்ணெய் தான் சம்மந்தி என சொல்லி பூரி செய்து கொடுக்கிறார். விஜயாவுக்கு கீழே உட்கார்ந்து சாப்பிட்டு பழக்கம் இல்லாததால் அவருக்காக பக்கத்து வீட்டில் இருந்து டைனிங் டேபிள் வாங்கி வந்து போடுகிறார் சத்யா. இப்படி அவருக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார்கள். ஆனால் அவரோ நன்றியுணர்வே இல்லாமல் இருக்கிறார்.

35
குட் நியூஸ் சொன்ன முத்து

முத்து, அண்ணாமலையிடம் தனக்கு ஸ்போகன் இங்கிலீஷ் கிளாசில் ஒரு நண்பர் கிடைத்திருப்பதாகவும், அவர் வருமான வரித்துறையில் வேலை செய்வதாகவும், அவரிடம் நம்முடைய வீட்டு பிரச்சனையை சொன்னபோது, அவர் பைனான்சியரை சந்தித்து இந்த பிரச்சனையை முடித்து தருவதாக சொல்லி இருக்கிறார் என சொல்ல, அண்ணாமலை சந்தோஷப்படுகிறார். அதுமட்டுமின்றி அந்த பைனான்சியரிடம் வருமான வரித்துறை அதிகாரியுடன் சென்று மனோஜ் வாங்கிய 48 லட்சம் ரூபாய் கடனுக்கான ஆதாரத்தை கேட்க இருப்பதாக சொல்கிறார் முத்து.

45
மனோஜ் - ரோகிணி சந்திப்பு

மறுபுறம் மனோஜின் ஷோரூமிற்கு ரோகிணி வருகிறார். அவர் வந்ததும் மனோஜிடம் ஆண்ட்டி எங்க என கேட்க, அவரோ அப்பா வந்து அம்மாவை அழைச்சிட்டு போயிட்டாங்க. இப்போ அவங்க மீனா வீட்டுல இருக்காங்க என சொல்கிறார். அதற்கு ரோகிணி, பார்த்தியா மனோஜ், கொஞ்ச நாள் கூட அங்கிளால ஆண்டியை பிரிஞ்சி இருக்க முடியல, அதேபோல தான் என்னாலையும் உன்னை பிரிந்து இருக்க முடியவில்லை என பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து மனோஜின் டைவர்ஸ் கேஸை நடத்தும் வக்கீல் அங்கு வருகிறார். அவர் மனோஜையும் ரோகிணியையும் ஒன்றாக பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

55
விஜயாவிடம் போட்டுக்கொடுத்த வக்கீல்

பின்னர் மனோஜை தனியாக அழைத்து பேசும் வக்கீல், என்ன மனோஜ் ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டீங்களா என கேட்கிறார். அதற்கு அவர் இல்லை மேடம் என சொல்லி மழுப்புகிறார். பின்னர் அங்கிருந்து செல்லும் வக்கீல், விஜயாவுக்கு போன் போட்டு பேசுகிறார். அவரிடம் என்ன மேடம் உங்க பையனோட டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்கிடலாமா என கேட்கிறார். எதுக்கு என விஜயா கேட்டதும், மனோஜ், ரோகிணி இருவரும் ஜோடியாக ஷோரூமில் இருந்ததை பற்றி சொல்கிறார் வக்கீல். இதனால் செம டென்ஷன் ஆகிறார் விஜயா. இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories