விஜயாவிடம் திட்டுவாங்கிய மீனா... சைடு கேப்பில் சகுனி வேலை பார்க்கும் சிந்தாமணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Nov 26, 2025, 08:34 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவிடம் சண்டை போட்டு அம்மா வீட்டுக்கு சென்ற மீனாவைப் பற்றி விஜயாவிடம் கொளுத்திப்போட்டுள்ளார் சிந்தாமணி. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து குடித்துவிட்டு வந்ததால் அவரிடம் சண்டைபோட்ட மீனா, வீட்டைவிட்டு வெளியேறியதோடு, அவர் எப்போ குடியை விடுகிறாரோ அப்போ தான் வீட்டுக்கு வருவேன் என சொல்லிவிட்டு செல்கிறார். தன்னுடைய அம்மா வீட்டுக்கு செல்லும் மீனாவிடம் என்ன நடந்தது என அனைவரும் கேட்டாலும் எதையும் சொல்லாமல் கண்ணீர் சிந்துகிறார் மீனா. முத்துவை சந்தித்து பேசும் சத்யாவுக்கு, மீனா எதனால் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு வந்தால் என்கிற உண்மை தெரியவருகிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

24
மீனாவை திட்டும் விஜயா

மீனா, விஜயாவின் யோகா கிளாஸுக்கு பூ கொடுக்க சென்றிருக்க, சிந்தாமணியுடன் அங்கு வரும் விஜயா, இவ எதுக்கு இங்க வந்தா என பார்வதியிடம் கேட்க, மீனா பூ கொடுக்க வந்ததாகவும், தான் வீடியோ ரெக்கார்டு செய்து கொண்டிருந்ததால் தான் அவளையே பூ அனைத்தையும் சாமிக்கு போட சொன்னதாக சொல்கிறார். மேலும் மீனா பூ போட்டால் தங்கள் யூடியூப் சேனலுக்கு ராசியாக இருப்பதாக சொல்ல, அதற்கு விஜயா, பொல்லாத ராசி என சொல்கிறார். இதையடுத்து பேசும் சிந்தாமணி, சில பேர் அப்படி தான் மாஸ்டர், நல்லா பூ மாதிரி பேசி நம்ப வச்சிடுவாங்க. ஆனா மனசுக்குள்ள முள்ளு தான் இருக்கும் என குத்திக் காட்டி பேசுகிறார்.

34
கொளுத்திப்போடும் சிந்தாமணி

மீனா வீட்டைவிட்டு போனதுக்கு அப்புறம் தான் தங்கள் வீடு நல்லா இருப்பதாக கூறும் விஜயா, இவ ஜாலியா ஊரை சுத்திகிட்டு இருக்கா. இப்படி ஊர் சுத்துறதுக்கு தான் வீட்டை விட்டு போனியா என கேட்கிறார். என்ன பிரச்சனை என பார்வதி கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை என சொல்லிவிட்டு கிளம்புகிறார் மீனா. அவரிடம், போடி போ, இந்த நாடகமெல்லாம் எத்தனை நாளைக்குனு நானும் பாக்குறேன். எனக்கு எதாச்சும் நல்லது செய்யனும்னு நினைச்சா திரும்ப வீட்டுக்கு வந்திராத என திட்டி அனுப்புகிறார் விஜயா.

இதையடுத்து விஜயாவை தனியாக அழைத்து பேசும் சிந்தாமணி, தான் மீனாவையும் முத்துவையும் தனக்கு தெரிந்த ஒரு சாமியார் வீட்டில் பார்த்ததாக கூறுகிறார். அந்த சாமியார் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும், அவங்க ஆவிகிட்டலாம் பேசுவாங்க எனவும் கூறுகிறார். ஒருவேளை மீனா உடம்பில் ஆவி எதாவது புகுந்திருக்குமோ என கொளுத்திப்போடுகிறார் சிந்தாமணி. இதைக்கேட்ட விஜயா, என்னது ஆவியா என ஷாக் ஆகிறார்.

44
மனம் மாறினாரா முத்து?

பின்னர் வீட்டுக்கு சென்ற மீனா சோகமாக அமர்ந்திருக்க, அப்போது அங்கு வரும் சீதா, என்ன பிரச்சனை என கேட்கிறார். ஆனால் மீனா கூற மறுக்கிறார். இதையடுத்து அங்கு வரும் ஸ்ருதி, மீனாவின் அம்மாவிடம் எல்லா உண்மையையும் சொல்லிவிடுகிறார். மறுபுறம் முத்துவிடமும் அவரது நண்பர்கள், அட்வைஸ் பண்ணுகிறார்கள். இதெல்லாம் பெரிய விஷயமில்லை என சொல்லி அவர் மனதை மாற்றுகிறார்கள். இதையடுத்து என்ன ஆனது? மீனாவிடம் நேரில் சென்று முத்து மன்னிப்பு கேட்டாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories