ஆனந்திக்கு புகுந்த வீட்டு சீர் கொண்டு வந்த அண்ணன், அக்கா! ஆத்திரத்தில் கொதிக்கும் லலிதா மற்றும் துளசி - சிங்கப் பெண்ணே அதிரடி!

Published : Mar 03, 2026, 06:11 PM IST

Anandhi Family Brings Seer Lalitha and Thulasi Angry : சிங்கப் பெண்ணே சீரியலில் ஆனந்திக்கு அவரது அண்ணன் மட்டும் அக்கா இருவரும் சேர்ந்து புகுந்த வீட்டு சீர்கள் கொண்டு வந்து தருகின்றனர் இதனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
ஆனந்திக்கு சீர் கொண்டு வந்த அண்ணன்

இங்க பெண்ணே சீரியலில் நேற்றைய எபிசோடில் லலிதா அம்மா மற்றும் துளசி இருவரும் ஒரு கோயிலில் சென்று அங்கு இருக்கும் அனைவரிடமும் சேர்ந்து சாப்பாடு வாங்கி சாப்பிடுகின்றனர். அன்பு இப்படி நம்மள தெருவுல விட்டுட்டானே என்று அழுது புலம்புகிறார் லலிதா அம்மா. பார்ப்பதற்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது‌‌. கால்ல செருப்பு கூட இல்லாம மாற்றுவதற்கு டிரஸ் கூட இல்லாம போன் இல்லாம கைல காசு இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு என்று புலம்புகிறார் லலிதா அம்மா மற்றும் துளசி. லலிதா அம்மா மற்றும் துளசி இருவரும் கோயிலில் உள்ள அமர்ந்திருக்கின்றனர்.

26
ஆனந்திக்கு சீர் கொண்டு வந்து தரும் அண்ணன் மற்றும் அக்கா:

ஆனந்தி அன்புடன் வீட்டிற்கு வந்தவுடன் ஆனந்தியின் அண்ணன் அண்ணி மற்றும் ஆனந்தியின் அக்கா கோகிலா மற்றும் கோகிலாவின் கணவர் ஆகியோர் அனைவரும் வருகின்றனர். அப்பொழுது ஆனந்தி மிக வருத்தத்துடன் அமைதியாகவே நிற்கின்றார் அப்பொழுது கோகிலா என்ன ஆனந்தி நாங்க வர்றவங்கள வான் கூட கேட்க மாட்டேங்கிற என்று சொல்கிறார். ஆனந்தியின் அண்ணன் உனக்கு கொடுக்கவேண்டிய சீர் எடுத்துட்டு வந்திருக்கோம் ஆனந்தி என்றே சொல்கிறார். ஏதோ எங்களால முடிஞ்சது என்று சொல்கிறார். 

36
Singapenne Serial Today Episode Tamil

இப்ப இருக்கிற நிலைமைக்கு சீர் ஒன்னு தான் குறைச்சலா அண்ணே. இப்ப எதுக்கு இதெல்லாம் எடுத்துட்டு வந்து இருக்கீங்க என்று ஆனந்தி கேட்கிறார். ஆனந்தி யாரு கிட்ட என்ன பேசுற என்று கேட்கிறார் அன்பு. கல்யாணம் முடிச்சு வீட்டுக்கு வந்தா சீல் கொடுப்பது முறைதானமா அதான் சீர் எடுத்துட்டு வந்து இருக்கோம் என்று சொல்கிறார் ஆனந்தி அண்ணனின் மனைவி. நீ இப்படி எல்லாம் பேச மாட்டியே? என்னாச்சு புள்ள வந்தவங்கள ஏன் வந்தாய் என்று கேட்குரா‌ என்று சொல்கிறார் கோகிலா.அதற்கு ஆனந்திக்காக உங்க எல்லார்கிட்டயும் நான் அனுப்பிகிறேன் என்று சொல்கிறார் அன்பு. நீங்க எல்லாரும் வந்து உட்காருங்க என்று சொல்கிறார் அன்பு.

46
நடந்ததை சொல்லும் ஆனந்தி:

கோகிலாவின் கணவர் அன்பு விடம் என்ன சாப்பிட எல்லாம் ஓகே தானே என்று கேட்க அதெல்லாம் ஓகே தான் என்று சொல்கிறார் அன்பு அதற்கு ஆனந்தி என்ன ஓகே. இங்க எதுவும் ஓகே இல்லை மாமா. சொல்ல சொல்ல கேட்காம போலீஸ் ஓட இந்த வீட்டுக்கு என்னை கூட்டிட்டு வந்து அத்தை எப்ப வீட்டோட போயிட்டாங்க. என்று சொல்கிறார் ஆனந்தி. அதற்கு கோகிலா ஐயோ என்ன புள்ள சொல்ற. என்று கேட்க ஆனந்தி உண்மையா தான் சொல்றேன். எங்க போயிருக்காங்கனே தெரியல. நானே இப்படி ஆயிடுச்சுன்னு நொந்து போய் கிடக்கிறேன். இப்ப நீங்க சிறு மொறன்னு வந்து நிக்கிறீங்க என்று வருத்தத்துடனும் கண்ணீருடனும் சொல்கிறார் ஆனந்தி. அம்மா சும்மா மிரட்டுவதற்காக போயிருக்காங்க சீக்கிரம் வந்துருவாங்க அதை தெரிஞ்சுக்காம அண்ணி சும்மா புலம்பிக்கொண்டே இருக்கங்க என்று சொல்கிறார் ஆனந்தியின் தங்கை. அதற்கு ஆனந்தி மிகவும் கோபமாக நீ சும்மா இதையே சொல்லிக்கிட்டே இருக்காத என்று சொல்கிறார். 

56
Anandhi Seer Varisai Singapenne

நீ சும்மா கோபப்படாதே புள்ள அத்தையை பத்தி யாழினிக்கு அன்புக்கும் தெரியாததா உனக்கு தெரிய போகுது அவங்க தான் சொல்றாங்களே அத்தை வந்துருவாங்கன்னு என்று சொல்கிறார் கோகிலா. அவங்க வந்துருவாங்க ஆனந்தி. நீயும் அன்பு வந்து சீர வாங்கிக்கோங்க என்று சொல்கிறார் ஆனந்தி அண்ணனின் மனைவி. மொத மொத நீ இந்த வீட்டுக்கு வந்திருக்க அதான் விளக்கு ஏத்துறதுக்கு குத்துவிளக்கு எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கோம். காய்ச்சுவதற்கு சமையல் பண்றதுக்கு பொருள் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேம். என்று சொல்ல எனக்கு எதுவுமே வேண்டாம் என்று மறுக்கிறார் ஆனந்தி அதற்குப் பிறகு அன்பு ஆனந்தியை வாங்கிக்கோ என்று சொல்கிறார்.

66
Lalitha and Thulasi Angry with Anandhi

ஆனந்திக்கு சத்தியம் செய்யும் அன்பு: நான் இந்த சீரை வாங்க மாட்டேன் என்று சொல்லும் ஆனந்தி நீ வாங்கிட்டா எங்க அம்மாவ நான் போய் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் என்று சொல்கிறார். அப்போ சத்தியம் பண்ணுங்க என்று ஆனந்த் கேட்க சத்தியம் செய்கிறார் அன்பு.அதன் பிறகு சீரை இருவரும் சேர்ந்து வாங்கிக் கொள்கின்றனர் இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories