திருடன் எங்கே.. சிக்குவானா சேது? - பணத்திருட்டு விவகாரத்தில் அன்புவின் அதிரடி முடிவு!

Published : Apr 01, 2026, 03:14 PM IST

Singappenne Serial Today Episode Promo: சிங்கப்பெண்ணே' தொடரின் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கான ப்ரோமோ வீடியோ, கதையில் ஒரு பரபரப்பான திருப்பத்தை முன்னறிவிக்கிறது. சாவித்திரி அக்காவின் பையிலிருந்து காணாமல் போன பணத்தைப் பற்றிய மர்மத்தை மையமாகக் கொண்டுள்ளது.

PREV
15
Singappenne Serial Today Episode Promo

சன் டிவியில் ப்ரைம் டைம் தொடராக ஒளிபரப்பாகி வரும் 'சிங்கப்பெண்ணே' சீரியல், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே 'சிங்கப்பெண்ணே' தொடரின் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கான ப்ரோமோ வீடியோ, கதையில் ஒரு பரபரப்பான திருப்பத்தை முன்னறிவிக்கிறது. சுமார் 31 வினாடிகள் கொண்ட இந்த ப்ரோமோ, சாவித்திரி அக்காவின் பையிலிருந்து காணாமல் போன பணத்தைப் பற்றிய மர்மத்தை மையமாகக் கொண்டுள்ளது.

25
Sun TV Singappenne Serial

அலுவலகத்தில் உள்ள அனைவரும் ஒரு இடத்தில் கூடியிருக்க, சாவித்திரி அக்காவின் பையில் இருந்த பணம் திருடு போனது பற்றி பேச்சு எழுகிறது. இந்தப் பணம் எங்கே போனது என்ற கேள்வி அனைவரிடமும் எழ, சந்தேகம் ஒவ்வொருவர் மீதும் திரும்புகிறது. குறிப்பாக யார் இந்தப் பணத்தை எடுத்திருப்பாரோ என்ற ஐயத்தை அனைவருக்கும் கேள்வியாக எழுப்புகிறது.

35
Thulasi vs Anandhi

தன்னைச் சுற்றியுள்ள சதித் திட்டங்களை அறியாத ஆனந்தி, ஒரு போன் காலில் தனது அக்காவிற்கு நடந்த விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், இதற்குப் பதிலளிக்கும் கோகிலா, "துளசி திருந்தி இருப்பாள் என்று நினைத்தால் அது நடக்காத காரியம், அவள் மாறவே மாட்டாள்" என்று மிகவும் வஞ்சகமாகப் பேசுகிறார்.

45
Singappenne Promo April 01

ப்ரோமோவின் இறுதியில் அலுவலகத்தில் அனைவரையும் சோதனை செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படுகிறது ஆனால், ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் இன்னும் சோதனை செய்யவில்லை என்று அன்பு சுட்டிக்காட்டப்படுவது கதையில் ஒரு எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. யார் என்று பார்த்தால் சேது தான் அந்த நபர். அவனிடம் ஏற்கனவே நிறைய பணம் இருக்கிறது. அலுவலகத்தில் செய்த சதி வேலைக்காக அவனுக்கு அரவிந்த் பணம் கொடுத்து இருக்கிறார். முழுதாக இல்லாமல் ஏற்கனவே ஆனந்திக்கு, சேது மேல் தவறு இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. அந்த விஷயம் இப்போது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

55
Singappenne Serial Today Episode Promo

நேற்றைய எபிசோடில், ஆனந்தியின் கணவர் அன்பு, தனது மனைவி மீது கொண்டுள்ள ஆழமான காதலையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். ஆனந்தியின் நற்பண்புகள் தனது தாய்க்கும் குடும்பத்தினருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக, அவர்களை ஒன்றாக வெளியே அழைத்துச் செல்ல சொல்கிறார். இதற்கிடையில், ஆனந்தியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் துளசி, மிகவும் வஞ்சகமாக நடந்துகொண்டார். பாசம் காட்டுவது போல நடித்து ஆனந்திக்குத் தலை சீவி விட்ட துளசி, ரகசியமாக அவளது முடியைச் சேகரித்து வைத்துக்கொண்டார். இது ஏதோ ஒரு தவறான செயலுக்கு என்பதை உணர்த்தியது. ஆனந்தியின் அக்கா கோகிலா, "பாம்பு கொத்துவது அதன் குணம்" என்று எச்சரித்தது நேற்றைய எபிசோடின் மிக முக்கியமான வசனமாகும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories