சண்டை இழுக்கும் சக்திவேல்... கோமதி வீட்டு விருந்தில் காத்திருக்கும் ட்விஸ்ட் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

Published : Jan 24, 2026, 10:33 AM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதி வீட்டில் நடக்கும் தடபுடல் விருந்துக்கு காந்திமதி தன் குடும்பத்தோடு வந்து கலந்துகொண்டுள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Pandian Stores 2 Serial Today Episode

‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரின் இன்றைய எபிசோடில் கோமதி வீட்டில் நடத்தப்படும் விருந்தில், எந்த வித பிரச்சனையும் உருவாகக் கூடாது என்பதில் காந்திமதி மிகுந்த கவனத்துடன் இருக்கிறாள். ஆனால், சக்திவேல் எப்படியாவது பழைய விரோதங்களை கிளப்ப வேண்டும் என்ற நோக்கில் இருப்பது, சூழ்நிலையை பதற்றமாக மாற்றுகிறது.

இந்த நிலையில், சுகன்யா பேசும் ஒரு வசனம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. “இந்த வீட்டுப்பக்கம் ஏன் வர்றது இல்ல” என்று கோமதி கேட்ட கேள்விக்கு, “என் கணவரை இந்த வீட்டுக்கு வரக்கூடாதுன்னு நீங்களே சொன்னீங்களே… அப்படியிருக்க நான் எப்படி வர முடியும்?” என்று அவள் பதிலளிக்க, அந்த இடமே சற்றே உறைந்து போகிறது. இதைக் கேட்ட பழனி, சக்திவேலும் சுகன்யாவும் இங்கிருந்து செல்லும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக்கொள்கிறான்.

24
கலகப்பாக்கும் பழனி

இதையடுத்து பேசும் கோமதி தன் கோபம் நீண்ட நாட்கள் இருக்காது என்பதை நினைவூட்டி, சுகன்யாவையும் காந்திமதியையும் கிச்சனுக்கு அழைத்து செல்கிறாள். அதே நேரத்தில், வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களை மகிழ்விக்க, ராஜியிடம் அனைவரையும் வீட்டைச் சுற்றிக் காட்டச் சொல்லும் பழனி, உறவுகளுக்குள் உள்ள தூரத்தை குறைக்க முயற்சிக்கிறான்.

அண்ணன்கள், மச்சான்கள் எல்லோரும் ஒன்றாக உட்கார வேண்டும் என்ற எண்ணத்தில், சரவணன், செந்தில், கதிர், முத்துவேல் ஆகியோரைக் கட்டாயப்படுத்தி அருகருகே அமர வைக்கிறார். கதிர் தயங்கினாலும், அதை மரியாதையாக மாற்றி பேசும் பழனி, அந்த தருணத்தை நகைச்சுவையாக்குகிறான். ஆனால், சக்திவேல் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு மறைமுக சவால் ஒளிந்திருப்பது தெளிவாக தெரிகிறது. செந்திலின் வேலை பற்றி அவர் கேட்க, அதற்கான பதில் சூழலை சற்றே சூடாக்குகிறது.

34
சக்திவேலின் உள்குத்து

இடையில், அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோமதியின் யோசனை, சின்ன சின்ன எதிர்ப்புகளுக்குப் பிறகு நிறைவேறுகிறது. ஆனால், அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சரவணனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சக்திவேல் மீண்டும் கேள்வி எழுப்ப, பழைய காயங்கள் மீண்டும் கிளர்வது போல தெரிகிறது. கோமதி சரியான நேரத்தில் வந்து சாப்பிட அழைப்பதால், இன்னொரு பெரிய சண்டை தற்காலிகமாக தவிர்க்கப்படுகிறது.

44
சண்டையில்லாமல் முடியுமா விருந்து?

சாப்பாடு பரிமாறும் போதும் பதற்றம் தொடர்கிறது. “நீங்க எனக்காக வந்தீங்களா, இல்ல உங்க தங்கச்சிக்காக வந்தீங்களா?” என்று ராஜி கேட்க, மாரியின் பதில் அனைவரையும் அதிர்ர்சிக்குள்ளாக்குகிறது. அதற்கு மேலாக, சக்திவேல் “நான் வந்திருக்கவே கூடாது” என்று கூற, அந்த இடமே அதிர்ச்சியில் உறைகிறது. வெளியில் ஒரு குடும்ப விருந்து போல தெரிந்தாலும், உள்ளுக்குள் பழைய வலிகள், சொல்லப்படாத கோபங்கள், புதிய மோதல்கள் என அனைத்தும் கலந்த ஒரு கனமான எபிசோடாக இது அமைந்துள்ளது. அடுத்தடுத்து என்ன பிரச்சனை வெடிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories