விஜய் டிவி ஹிட் சீரியலில் இருந்து திடீர் என விலகிய நடிகை! இனி அவருக்கு பதில் இவர் தான்!

First Published Sep 13, 2024, 7:40 PM IST

விஜய் டிவி சீரியல் நடிகை சாய் காயத்திரி உடல்நல பிரச்சனை காரணமாக, தற்போது நடித்து வரும் 'நீ நான் காதல்' சீரியலில் இருந்து விலக உள்ளதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 

Sai Gayatri

விஜய் டிவியில் ரொமான்டிக் ட்ராமா ஜார்னரில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'நீ நான் காதல்'. இந்த சீரியல் 'இஸ் பியார் கோ கியா நாம் தூண்' என்கிற ஹிந்தி சீரியலின் தமிழ் ரீமைக்காக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பிரேம் ஜாக்கோ ஹீரோவாக நடிக்க, வர்ஷினி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சாய் காயத்ரி இரண்டாவது நாயகியாகவும், சங்கரேஸ் குமார் இரண்டாவது நாயகனாகவும் நடித்து வருகிறார்.  இவர்களை தவிர நவீன் முரளிதரன், சரவணன், ஷீலா, தமிழ்ச்செல்வி, கிரிஷ், சங்கீதா பாலன், ஹர்ஷா நாயர், மதுமிதா இளையராஜா, உள்ளிட்ட பலர் இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

Sai Gayatri Quit Serial

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல், ஒரு வருடத்தை கடந்து... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து நடிகை சாய் காயத்திரி விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில், "அனைவருக்கும் வணக்கம். தவிர்க்க முடியாத உடல்நல பிரச்சனைகள் காரணமாக 'நீ தான் காதல்' சீரியலில் இருந்து விலகுகிறேன். அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். இதுவரை நீங்கள் கொடுத்த அதே வரவேற்பை இனியும் அணு மற்றும் ஆகாஷ் கதாபாத்திரத்திற்கு கொடுக்க வேண்டும். உங்களுடைய அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுக்கு மிக்க நன்றி. கூடிய விரைவில் உங்களை சின்னத்திரை மூலம் சந்திப்பேன் நன்றி என தெரிவித்துள்ளார்.

அடேங்கப்பா... சம்பள விஷயத்தில் கமல்ஹாசனையே மிஞ்சிய விஜய் சேதுபதி! இத்தனை கோடி சம்பளமா?

Latest Videos


Nee Naan Kaadhal

மேலும் தனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த விஜய் டிவி தொலைக்காட்சி மற்றும் ஒட்டுமொத்த சீரியல் குழுவுக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளதோடு, ஒரு வருடமாக தன்னுடன் பயணித்த குழுவினரை மிகவும் மிஸ் செய்வதாக கூறியுள்ளார் காயத்திரி. காயத்ரி சீரியல் நடிகை என்பதை தாண்டி, தனக்கென யூ டியூப் பக்கம் மற்றும் தொழிலதிபராகவும் வளர்ந்து வருகிறார். இவர் சிறிய அளவில் துவங்கிய சாய் சீக்ரெட்ஸ் என்கிற நிறுவனம், தற்போது அடுத்த அடுத்த கட்டத்திற்கு வளர்ந்து வருகிறது. சாய் சீக்ரெட்ஸ் நிறுவனத்தின் மூலம் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஹேர் ஆயில், ஃபேஸ் மாஸ்க், நலங்கு மாவு, ஹேர் பேக், உள்ளிட்ட 8 பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவருடைய பொருட்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Shocking Reason:

மேலும் சாய் காயத்திரி, விஜய் டிவியில் இதற்கு முன்பு நடித்த ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ், போன்ற சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. தன்னுடைய மனதுக்கு பிடித்த கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் சாய் காயத்திரி கதாபாத்திரங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக அந்த சீரியலில் இருந்து விலகி விடுவார். அப்படி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதல் சீசனில், இவர் நடித்து வந்த கதாபாத்திரம் திடீர் என வில்லி தோற்றத்தில் காட்டப்பட்டதால்... உடனடியாக அந்த சீரியலில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் உடல்நல பிரச்சினை காரணமாக சீரியலில் இருந்து விலகுவதாக கூறி உள்ளதை தொடர்ந்து, ரசிகர்கள் பலர் உடல் நலனை பார்த்துக் கொள்ளுமாறு அக்கறையுடன் கூறி வருகின்றனர்.

20 முறை ரிஜெக்ஷன்... விஜயகாந்த் படத்திற்கு ஒரே நாள் இரவில் இளையராஜா கம்போஸ் செய்த ஹிட் பாடல்!

Arshitha

நீ நான் காதல் சீரியலில் இருந்து, நடிகை சாய் காயத்திரி விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக... தமிழும் சரஸ்வதியும், சீரியலில் நடித்த நடிகர் அர்ஷிதா தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கூடிய விரைவில் இவர் இடம்பெறும் காட்சிகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

click me!