சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி, மனோஜ் திருமணம் செய்துகொள்ள உள்ள ஹரிணியை தன்னுடைய பியூட்டி பார்லருக்கு அழைத்து பேசி உள்ளார். அதன்பின் என்ன ஆனது என பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தான் திருமணம் செய்துகொள்ள உள்ள ஹரிணி உடன் வெளியே சென்று சாப்பிட சென்றிருக்கிறார். மனோஜ் காரில் போகலாம் என சொல்ல, அதற்கு ஹரிணி தனக்கு ஆட்டோவில் போக ஆசை என சொல்லி அவரை ஆட்டோவில் அழைத்து செல்கிறார். அப்போது செல்லும் வழியில் ஹரிணி வாந்தி எடுக்கிறார். அப்போது அவருக்காக சோடா வாங்கிவர மனோஜ் செல்ல, அந்த கேப்பில் ஹரிணியை சந்திக்கும் ரோகிணி, அவரிடம் நல்லவர் போல பேசி, அவருக்கு தன்னுடைய பார்லர் விசிட்டிங் கார்டையும் கொடுத்துவிட்டு செல்கிறார். இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
மனோஜின் திமிர்த்தனம்
இதன்பின்னர் ஹரிணியை அழைத்துக் கொண்டு மனோஜ், ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு செல்கிறார். அவர் கூடவே முத்து, மீனா, ஸ்வேதா ஆகியோரும் வந்திருக்கிறார்கள். அப்போது மனோஜ் அவர்கள் முன்னிலையில், ஓவராக பந்தா பண்ணிக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் ஒரு ஹோட்டலா, அமெரிக்காவுல இதைவிட எவ்வளவு பெரிய ஹோட்டல்லாம் இருக்கும் என்று பேசுகிறார் மனோஜ். அவரின் இந்த நடவடிக்கை ஹரிணிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தன்னுடைய சொந்த தம்பியின் ஹோட்டலையே இப்படி தரக்குறைவா பேசுறாரே என ஹரிணி செம அப்செட் ஆகிறார்.
35
சிந்தாமணியின் சூழ்ச்சி
மறுபுறம் சிந்தாமணி, ரேகாவின் அப்பாவை சந்தித்து சத்யாவின் காதலைப் பற்றி பேசுகிறார். அவரும் சிந்தாமணியின் பேச்சைக் கேட்டு மனசு மாறிவிடுகிறார். நீ சொன்னது கரெக்ட் தான், நம்ம பொண்ணை ஒரு நல்ல இடத்தில் தான் கட்டிக் கொடுக்க வேண்டும். அதையே நானும் விரும்புவேன். இந்த விஷயத்துல நான் உனக்கு சப்போர்ட் பண்ணுறேன். முதலில் அவனை வேலையை விட்டு தூக்குறேன்னு சொல்கிறார். ஆனால் அதையெல்லாம் செய்ய வேண்டாம் என சொல்லும் சிந்தாமணி, நீ இப்போ அவனை வேலையை விட்டு தூக்குனா, நம்ம பொண்ணு அவன்கூட ஓடிப் போயிடும். அதனால நம்ம பொண்ணை எங்காச்சும் வெளி ஊருக்கு அனுப்புவோம் என ஐடியா கொடுக்கிறார்.
ஸ்ருதியின் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஹரிணியிடம் அட்வாண்டேஜ் எடுக்கும் மனோஜ், இதெல்லாம் சாப்பிடாத, இது உனக்கு ஒத்துக்காது, ஸ்பூன்ல சாப்பிடுனு சொல்லி பந்தா பண்ணுகிறார். இதனால் கடுப்பாகும் ஹரிணி, மனோஜை திட்டிவிடுகிறார். இதனால் ஷாக் ஆகிறார் மனோஜ். பின்னர் வீட்டுக்கு செல்லும் முத்து, மீனாவிடம் பேசுகையில், மனோஜ் பண்ணுறது சரியில்ல, ஹரிணியோட முகமே மாறிப்போச்சு என சொல்கிறார். அதன்பின்னர் ரேகா - சத்யா இருவருக்கும் எப்படி கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பேசுகிறார்கள்.
55
ரோகிணியின் டிராமா
இறுதியாக ஹரிணி, ரோகிணியின் பியூட்டி பார்லருக்கு செல்கிறார். அவரிடம் மனோஜ் தான் தன்னுடைய கணவர் என்பதை தெரியப்படுத்துவதற்காக தன்னுடைய மொபைலில் தானும் மனோஜும் ஜோடியாக எடுத்த போட்டோவை வால்பேப்பராக வைத்திருக்கிறார். அதை எப்படியோ ஹரிணியிடம் காட்டிவிடுகிறார். அதன்பின்னர் இவர்கூட தான் தனக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது என ஹரிணி சொன்னவுடன். ரோகிணி அழுது டிராமா போட ஆரம்பிக்கிறார். அநேகமாக இந்த கல்யாணம் நின்றுபோக அதிகம் வாய்ப்புள்ளது. அதைப்பற்றி இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.