Pandian Stores 2 Serial Today 747th Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 747ஆவது எபிசோடில் மீனா மற்றும் தங்கமயில் இருவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்ததை பார்த்து ராஜீ அதிர்ச்சி அடைந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் இன்று அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், மீனா மற்றும் தங்கமயில் இருவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்ததை ராஜீ நேராக பார்த்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட ராஜீ, அங்கிருந்து பேசாமல் நடந்தார்.
25
Pandian Stores 2 Serial Today Episode
ராஜீயை பார்த்த மீனா அவரை தடுத்து நிறுத்தினார். அப்போது கோபம் கொண்ட ராஜீ அவர்கள் உடன் உங்களால் எப்படி பேச முடியும். ஓ, உங்களை புகாரில் சேர்க்கவில்லை என்று அவர்களுடன் பழக ஆரம்பித்துவிட்டீர்களா? எல்லோர் மீதும் போலீசில் புகார் கொடுத்து ஸ்டேஷனில் உட்கார வைத்தார்கள். அப்படிப்பட்டவர்களுடன் நீங்கள் எப்படி பேசலாம் என்று கோபத்தில் பேசினார்.
இதைத் தொடர்ந்து ராஜியை சமாதானப்படுத்திய மீனா அவருடன் தங்கமயில் வேலை பார்க்கும் வீட்டிற்கு வந்தார். இதைத் தொடர்ந்து ஆரம்பம் முதல் இப்போது வரை என்ன நடந்தது என்பது பற்றி பிளாஷ்பேக்காக எல்லா கதைகளையும் மீனாவும், தங்கமயிலும் பகிர்ந்து கொண்டனர். அப்போது இவ்வளவு தூரம் நடந்திருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால், இனிமேலும் உங்களுக்கு ஆதரவு கொடுக்க முடியுமா என்றால் என்னால் கொடுக்க முடியாது. ஆனால், உங்களுக்கும், உங்களது குழந்தைகளுக்காகவும் கடவுள்கிட்ட வேண்டி கொள்கிறேன். அதை மட்டும் தான் என்னால் செய்ய முடியும் என்றார்.
45
ராஜீ மற்றும் மீனா
அதை நான் கண்டிப்பாக செய்வேன் என்றார். அப்போது பேசிய தங்கமயில் இதைப் பற்றி யாரிடமும் நீ சொல்ல வேண்டாம். உன்னுடைய கணவர் கதிர் தம்பிக்கிட்ட கூட சொல்லக் கூடாது என்றார். அதன் பிறகு ராஜீ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கடைசியாக கதிர் மற்றும் ராஜீ இருவரும் டீ கடைக்கு சென்றனர். அப்போது மீனாவிற்கு போன் போட்ட ராஜீ நான் கதிருடன் இருக்கிறேன். அவரிடம் சொல்லவா என்று கேட்டார். அதற்கு மீனா அப்படி எதுவும் சொல்லிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய 747ஆவது எபிசோடு
இறுதியாக கதிர் மற்றும் ராஜீ இருவரும் டீக்கடையில் இருப்பதை பார்த்து வண்டியை நிறுத்திவிட்டு வந்த முத்துவேல் தனது மகளிடம் சென்று பேசினார். கோச்சிங் கிளாஸ் போறது பற்றியும், டிராவல்ஸ் பிஸினஸ் எப்படி போகிறது என்பது பற்றியும் கேட்டார். இதைத் தொடர்ந்து வீட்டில் நடந்த சண்டையையும் பற்றி விசாரிக்க, டிராவல்ஸ் வைக்க கொடுத்த பணத்தை திரும்ப கேட்பதாகவும் கேள்விப்பட்டேன் என்று சொல்லவே, ஆமாம், அவர் கேட்கிறார். எப்படியாவது ரெடி பண்ணி கொடுக்க வேண்டும். நான் கொடுத்துவிடுகிறேன். எப்படியிருந்தாலும் கொடுக்க வேண்டியது தான். அதற்காக உங்களிடமிருந்து வாங்கி கொடுத்தாலும் அதனை அவர் வாங்கிக் கொள்ளமாட்டார் என்றார். என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு முத்துவேல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 747ஆவது எபிசோடு முடிந்தது.