Pandian Stores: உண்மையை உடைத்த மீனா; ஆத்திரத்தில் அறைந்த பழனி! சுகன்யாவின் நாடகம் அரங்கேற்றம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், இன்றைய 444ஆவது எபிசோடில் சுகன்யாவைப் பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட பழனிவேல், அவரை கன்னத்தில் அடித்ததோடு அவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
 

Pandian Stores 2 serial April 3rd Episode update mma

செந்திலை கண்ட்ரோல் செய்யும் மீனா:

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் நேற்றைய எபிசோடில் மீனா தன்னை திட்டியதாக பாண்டியனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே... செந்தில் வீட்டுக்குள் வருவதோடு முடிந்தது. இதையடுத்து இன்றைய 444ஆவது எபிசோடில், செந்திலிடம் என்ன நடந்தது என்பது குறித்து கோமதி விளக்குகிறார். அதற்கு செந்தில் என்ன மீனா இது? என்று கேட்க, அதற்கு மீனா சும்மா இருங்க என்று செந்திலை கண்ட்ரோல் செய்கிறார்.

Pandian Stores 2 serial April 3rd Episode update mma

மீனா சொன்ன பதில்:

மேலும், இனிமேல் நான் அவங்களிடம் எதுவும் பேசிக் கொள்ளமாட்டேன். அவர்கள் விஷயத்தில் நான் தலையிடமாட்டேன் என்று கூறிவிட்டு துணியை துவைத்து வைத்துவிட்டு வந்தேன் சென்று காய போடுகிறேன் என்று உள்ளே செல்கிறாள். அதன் பிறகு செந்தில் மற்றும் மீனா இருவரும் சுகன்யாவைப் பற்றி பேசி கொண்டிருக்கும் போது, பழனிவேல் சித்தப்பாவிடம் இதைப் பற்றி தெரியப்படுத்தாலம் என்று கூறிக் கொண்டு அவரிடம் சென்று உண்மையை கூறுகிறார்கள்.

Pandian Store: காலேஜூக்கு போன குமரவேலுக்கு அடி - உதை! சிக்கிய சுகன்யாவை வெளுத்து விட்ட மீனா!
 


பழனிக்கு தெரியவந்த உண்மை:

ஆனால், அதற்கு முன்னதாக சுகன்யா, வேண்டுமென்றே செய்திருக்கமாட்டார். அவரை தப்பு சொல்லவே உன்மீது பழி போட்டுவிட்டார். அவ்வளவு தான் என்று பழனிவேல் தனது மனைவி சுகன்யாவைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே இல்ல சித்தப்பா என்று மீனா பேச ஆரம்பிக்கிறார்.

அதுமட்டுமின்றி அரசி மற்றும் குமரவேல் இருவரையும் சேர்த்து வைக்க அவர் திட்டம் போடுகிறார் என்று சுகன்யாவைப் பற்றிய எல்லா விஷயத்தையும் மீனா தெளிவாக கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பழனிவேல், தனது மனைவியை கன்னத்தில் அறைந்து அவரது கழுத்தை பிடிக்கிறார். இதற்கு  அசராத சுகன்யா, மீனா மற்றும் பழனிவேல் இருவரையும் ஒன்றாக சேர்த்து வைத்து பேசுகிறார்.

நாடகத்தை அரங்கேற்றும் சுகன்யா:

அதன் பிறகு சுகன்யா மீண்டும் தனது வேலையை ஆரம்பிக்கிறார். ஆம், பழனிவேல் தன்னை அடித்து கொள்ளப்பார்ப்பதாக நாடகம் போடுகிறார். மேலும், வீட்டிலுள்ள சாமான்களை எல்லாம் தூக்கி கீழே போட்டு சத்தம் போட்டு கத்துகிறார். இதைக் கேட்டு பாண்டியன் வேகமாக ஓடி வந்து பழனிவேல் ரூம் கதவை தட்டுகிறார். இதில் பயந்து போன பழனிவேல் ,அப்படியே சைலண்டாக நிற்கிறார். அதோடு 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலின் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Pandian Stores Update: குமரவேல் போட்ட பிளான்! அரசியை காலேஜுக்கு அனுப்ப சம்மதிப்பாரா கோமதி? 

Latest Videos

vuukle one pixel image
click me!