முத்துவேல் தனது அம்மாவிற்கு தங்க செயின் பரிசளிக்க, கோமதி தனது அம்மாவிற்காக தங்க வளையல் பரிசாக அளித்தார். கதிர் அம்மாச்சி மற்றும் தாத்தாவின் புகைப்படம் இருக்கும் போட்டோவை பரிசாக கொடுத்து பாட்டியை அசத்தினார். இதைத் தொடர்ந்து கோமதியின் குடும்பத்தார் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதில் சரவணன், தங்கமயில், செந்தில், மீனா, கதிர், ராஜீ, கோமதி, பாண்டியன், அரசி, குழலி மற்றும் அவரது கணவர், பழனிவேல் மற்றும் சுகன்யா என்று ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.