Mayilvaganam Transformation into Businessman in Karthigai Deepam Serial : கார்த்திகை தீபம் சீரியலில் சும்மாவே இருந்த மயில்வாகனத்தை சந்திரகலா தேவையே இல்லாமல் அவமானப்படுத்தவே அவரோ இப்போது மாமியார் பெயரில் புதிதாக ஹோட்டல் திறந்துள்ளார்.
Mayilvaganam new hotel opening in Karthigai Deepam
கார்த்திகை தீபம் சீரியலில் இதுவரையில் காமெடியனாகவே இருந்த மயில்வாகனம் இப்போது பிஸினஸ்மேனாகியுள்ளார். இந்த சீரியலில் லேடி கெட்டப், சிங் கெட்டப், கூர்கா கெட்டப், வெளிநாட்டுக்காரன் கெட்டப் என்று அவர் போடாத வேஷங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா வேடங்களிலும் மயில்வாகனம் நடித்துள்ளார். மேலும், இந்த சீரியலில் காமெடியனாகவும் வலம் வந்தார்.
25
Chandrakala makes Mayilvaganam a businessman,
சீரியல் ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரையில் வீட்டோட மாப்பிள்ளையாகவே இருந்தார். எப்படி ரோகிணி குழந்தை பெற்றுக் கொள்ளாமல் புருஷனை தனது கண்ட்ரோலில் வைத்திருந்து அதன் பிறகு திருந்தினாரோ அதே போன்று தான் இப்போது மயில்வாகனமும் சின்ன மாமியாரான சந்திரகலாவின் உதவியால் இப்போது பிஸினஸ் மேனாகியுள்ளார்.
35
Karthigai Deepam serial March 2026 twist
ஆம், வீட்டோட மாப்பிள்ளையாக எந்த வேலையும் செய்யாமல் தண்டத்துக்கு உட்கார்ந்து தண்டச்சோறு மாதிரி சாப்பிடுறீரியே அப்படி இப்படி என்று மயில்வாகனத்தை சந்திரகலா அவமானப்படுத்தினார். அப்போதுதான் அவருக்கு ஞானோதயம் பிறந்தது. அதன் பிறகு ஒருஹோட்டலில் சர்வர் வேலை செய்தார். அவரை தேடி கண்டுபிடித்த கார்த்திக் அவருக்கு என்று சொந்தமாக பிஸினஸ் செய்து கொடுக்க முன் வந்தார். அதன்படியே அவருக்கு வங்கி லோன் ஏற்பாடு செய்து கொடுக்க சொந்தமாக ஹோட்டல் பிஸினஸூம் தொடங்கினார்.
45
Zee Tamil Karthigai Deepam latest promo
இதைப் பற்றியும் சந்திரகலா தனது அக்கா சாமுண்டீஸ்வரியிடம் கொழுத்திப் போட, அவரும் இதைப் பற்றி மயில்வாகனத்திடம் விசாரித்தார். அவரும், ஆமாம், அத்தை, எல்லா வேலைகளும் முடிந்த பிறகு நானே உங்களிடம் இதைப் பற்றி சொல்லலாம் என்று இருந்தேன். அதற்குள் நீங்களே கேட்டுட்டீங்க. நீங்கள் தான் ஹோட்டலை திறந்து வைக்க வேண்டும். இப்போது குழந்தை பிறக்க போகுது… இன்னும் சும்மாவே இருக்க கூடாது அல்லவா. அதன் பிறகு செலவு நிறைய இருக்கிறது. அதனால் தான் சொந்தமாக பிஸினஸ் செய்யலாம் என்று முடிவு செய்தோம்.
55
Mayilvaganam Transformation into Businessman in Karthigai Deepam
இதற்கு வங்கி லோன் ஏற்பாடு செய்து கொடுத்தது ரேவதியின் வீட்டுக்காரர் கார்த்திக் தான் என்றார். அதன் பிறகு ஹோட்டலை சாமுண்டீஸ்வரி கையால் திறந்தனர். ஹோட்டலுக்கு மாமியாரின் பெயரை வைத்திருந்தனர். இதைப் பார்த்த சாமுண்டீஸ்வரிக்கு என்ன ஒரு ஆனந்தம். பின்னர், ஹோட்டலில் சாப்பிட்டு கல்லாப்பெட்டியில் பணம் போட்டார். மயில்வாகனமும் கம்பீரமாக முதலாளி என்ற தோரணையோடு கல்லாவில் அமர்ந்தார். இத்தனை நாட்கள் வெறும் காமெடியனாக சீரியலில் வலம் வந்து கொண்டிருந்த மயில்வாகனம் இப்போது முதலாளிதாக அவதாரம் எடுத்திருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.