அதன்பின், மனோஜிடம் சென்று, முத்து, மீனா, ரவி மற்றும் ஸ்ருதி ஆகியோர் திருமண நடக்கும் இடத்திலேயே இருப்பதாகவும், அவர்கள் திருமண ஏற்பாடுகளையே கவனித்து வருவதாகவும் கூறுகிறார். இதைக் கேட்டு மனோஜ் என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றமடைகிறார். அந்த நேரத்தில், ஜோதிடர் மணப்பெண்ணின் தாயாரை தனியாக அழைத்து, முத்துவும் ரவியும் மனோஜின் சகோதரர்கள் என்றும், அவர்கள் அங்கு இருந்தால் இந்தத் திருமணத்தை தடுக்கக்கூடும் என்றும் எச்சரிக்கிறார். இதனால், மணப்பெண் வீட்டார் முத்து, மீனா, ரவி, ஸ்ருதி ஆகியோரிடம் திருமணம் நடக்க தாமதமாகும் என சொன்னதும், அவர்களும் தங்களுக்கு வேலை இருப்பதாக கூறி அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள்.