இதையெல்லாம் தாண்டி சிறைக்கு சென்று வந்த குமரவேலு கடந்த சில நாட்களாக தூக்கமின்மையால் தவித்து வந்துள்ளார். அவர் சரியாக சாப்பிடுவதும் இல்லை. எப்போதும் அரசியைப் பற்றிய நினைவுகள் அவர் கண் முன்னே வந்து வந்து சென்றது. மேலும், ராஜீயும், குமரவேலுவை சந்தித்து பேசினார். தனது அண்ணனைப் பற்றி கவலைப்படுவதாக கூறினார்.
தனக்காக பழி வாங்க நினைக்க வேண்டாம். தான் கதிருடன் சந்தோஷமாக இருப்பதாக கூறினார். மேலும், இனிமேல் நீ உன்னுடைய வாழ்க்கையை மட்டும் கவனித்துக் கொள் என்றும் அட்வைஸ் செய்தார். அப்போது குமரவேல் கண்களில் கண்ணீர் வந்தது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தனது வாழ்க்கைய்யை நினைத்து குமரவேல் கவலைப்பட தொடங்கினார் என்று கூறப்படுகிறது.