Kayal Serial Actress Chaitra Reddy : 'கயல்' சீரியல் மூலம் பிரபலமான நடிகை சைத்ரா ரெட்டி, தனது கணவரும் தயாரிப்பாளருமான ராகேஷ் சமலாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சன் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் சைத்ரா ரெட்டி. ஆறு வருடங்களுக்கு முன்பு கோலாகலமாக நடந்த இவரது திருமணம் தற்போது விவாகரத்து கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான ராகேஷ் சமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சைத்ரா ரெட்டி. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து கணவருடன் இருந்த அனைத்துப் புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இதனால் அவர் விரைவில் விவாகரத்து பெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
36
2020ல் திருமணம்
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டாலும், சைத்ரா ரெட்டி பெங்களூருவை தனது வீடாக மாற்றிக்கொண்டார். தற்போது தமிழ், தெலுங்கு சீரியல்களில் பிஸியாக இருக்கிறார். இவர் நவம்பர் 2020-ல் ராகேஷை மணந்தார். இந்த விழாவில் பாட்மிண்டன் வீரர் புல்லேல கோபிசந்த், கன்னட நடிகர் விஜய் சூர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2014 முதல் 2016 வரை கன்னடத்தில் 'அவனு மற்றும் ஷ்ராவணி' சீரியல் ஒளிபரப்பானது. அதில் நடித்த சைத்ரா ரெட்டி, அதன்பிறகு, 2019-ல் வினோத் பிரபாகர் நடித்த 'ரக்கட்' (Rugged) படத்தில் சைத்ரா ரெட்டி ஹீரோயினாக நடித்தார். ஆனால், அந்தப் படம் வெற்றி பெறாததால், முழுவதுமாக தெலுங்கு மற்றும் தமிழ் சின்னத்திரைக்கு மாறினார்.
56
திருமண கொண்டாட்டம்
தனது திருமணத்திற்கு முந்தைய நாள், 'கடைசியில் திருமண தேதி உறுதியாகிவிட்டது. நவம்பர் 11, 2020 அன்று குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துகொள்கிறோம். காதல், பொறுமை வென்றது' என சைத்ரா ரெட்டி சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். தோழிகளுடன் கடற்கரையில் பேச்சிலர் பார்ட்டியும் கொண்டாடினார்.
66
சைத்ராவின் காதல்
இதற்கு முன்பு, சைத்ரா ரெட்டி தனது சகோதரியின் திருமணத்தில் ராகேஷ் சமலாவுடன் தோன்றி காதலை வெளிப்படுத்தினார். ராகேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சைத்ரா, 'ஹே @rakeshsamalafilms, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை இனி எப்போதும் என் அருகில் இருக்கட்டும் (பி.கு: இந்த புகைப்படம் என் தங்கையின் திருமணத்தில் எடுத்தது, என்னுடையதில் அல்ல). அந்த கப்பிள் கோல்ஸை மேட்ச் செய்ய நாங்கள் எங்கள் உடையை மேட்ச் செய்தோம்' என்று குறிப்பிட்டிருந்தார்.