Karthigai Deepam : கனடாவுக்கு கிளம்பும் ரேவதி... சாமுண்டீஸ்வரியின் சதித்திட்டம் பலிக்குமா?

Published : Aug 05, 2026, 11:46 AM IST

Karthigai Deepam Serial 05 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியின் புது பிளானிற்கு சிக்கல் ஏற்படுகிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Karthigai Deepam Serial Today Episode

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல், ஒவ்வொரு நாளும் புதிய திருப்பங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இன்றைய எபிசோடிலும் சாமுண்டீஸ்வரியின் புதிய சதி கதையை மேலும் பரபரப்பாக்குகிறது. கார்த்திக்கும் ரேவதிக்கும் இடையிலான நெருக்கத்தை அறிந்த சாமுண்டீஸ்வரி, அவர்களை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்ற முடிவுடன் புதிய திட்டத்தை வகுக்கிறார். அந்த நேரத்தில், கனடாவில் வசிக்கும் தனது தோழி ஈஸ்வரியிடமிருந்து சாமுண்டீஸ்வரிக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. மகளின் திருமண விழாவிற்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று ஈஸ்வரி அழைக்கிறார்.

Karthigai Deepam : சந்திரகலாவின் மாஸ்டர் பிளான்... கார்த்திக் - ரேவதியை கையும் களவுமாக பிடித்த சாமுண்டீஸ்வரி!

24
கனடா செல்லப்போவது யார்?

ஆனால் தனக்கு வேறு வேலை இருப்பதாக கூறும் சாமுண்டீஸ்வரி, குடும்பத்தில் இருந்து யாரையாவது கனடாவுக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்கிறார். இதுகுறித்து வீட்டில் பேசும்போது, ஒவ்வொருவரும் தங்களிடம் பாஸ்போர்ட் இல்லையோ அல்லது பயணம் செய்ய முடியாத சூழ்நிலையோ இருப்பதாக கூறி மறுக்கிறார்கள். அப்போது ரேவதி, தன்னிடம் பாஸ்போர்ட்டும் விசாவும் இருப்பதாகவும், தானே கனடா சென்று வரலாம் என்றும் கூறுகிறார். ரேவதியின் இந்த முடிவைக் கேட்ட சாமுண்டீஸ்வரி வெளிப்படையாக அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் தனது திட்டம் நிறைவேறப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Karthigai Deepam : ரேவதி காட்டிய வீடியோவால் கொந்தளித்த சந்திரகலா... கார்த்தி - ரேவதியை பிரிக்க புதிய சதி!

34
சந்திரகலாவுக்கு ஆர்டர் போட்ட சாமுண்டீஸ்வரி

உடனடியாக சந்திரகலாவை அழைத்து இரண்டு விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்யும்படி உத்தரவிடுகிறார். அதில் ஒன்று உண்மையானது, மற்றொன்று போலியாக தயாரிக்கப்பட வேண்டும் என கூறுகிறார். இந்த டிக்கெட்டுகள் மூலம் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த பயணம் தொடர்பான எந்த தகவலும் கார்த்திக்குத் தெரியக்கூடாது என்று சந்திரகலாவிடம் சாமுண்டீஸ்வரி கடுமையாக எச்சரிக்கிறார். ஆனால் அவரின் திட்டத்திற்கு எதிராக, ரேவதி தனது கனடா பயணத்தை கார்த்திக்கே நேரடியாக தெரிவித்து விடுகிறார்.

Karthigai Deepam : சிவனாண்டியின் ஆட்டம் ஓவர்... கோவில் நகை திருட்டில் கார்த்திக் வைத்த செக்...!

44
சாமுண்டீஸ்வரிக்கு புது சிக்கல்

இதனால் சாமுண்டீஸ்வரியின் திட்டத்தில் புதிய சிக்கல் உருவாகுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையில், சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து சாமுண்டீஸ்வரியின் திட்டத்தைப் பற்றி ஆலோசனை நடத்துகிறார். இருவரும் சேர்ந்து திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள். ரேவதி உண்மையிலேயே கனடா செல்லப் போகிறாரா? சாமுண்டீஸ்வரியின் சதி பலிக்குமா? கார்த்திக் இந்த திட்டத்தை முறியடிப்பாரா? என்ற பல கேள்விகளுக்கு பதில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோடில் தெரியவர உள்ளது.

Karthigai Deepam : ஆசை காட்டிய மயில்வாகனம்... சிக்கப் போகும் சிவனாண்டி; கார்த்திக்கின் அடுத்த மூவ் என்ன?

Read more Photos on
click me!

Recommended Stories