ஆரம்பத்தில் இந்த தகவலை நம்ப மறுக்கும் சாமுண்டீஸ்வரி, புகைப்படங்களை பார்த்தவுடன் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். கோபமடைந்த அவர் உடனடியாக கோவிலுக்கு விரைந்து சென்று உண்மையை நேரில் பார்க்க முடிவு செய்கிறார். கோவிலில் பூஜை நடைபெறும் இடத்துக்கு வந்த சாமுண்டீஸ்வரி, கார்த்திக் மற்றும் ரேவதி இணைந்து தம்பதியராக அமர்ந்திருப்பதை கண்டு ஆவேசமடைகிறார். அவர்களிடம் நேரடியாக விளக்கம் கேட்க முனையும் தருணத்தில், சந்திரகலா சாமர்த்தியமாக குறுக்கிட்டு சூழ்நிலையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார்.
சாமுண்டீஸ்வரியின் இந்த வருகை கார்த்திக் - ரேவதி உறவில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? சந்திரகலாவின் திட்டம் முழுமையாக வெற்றி பெறுமா? அல்லது எதிர்பாராத திருப்பம் ஏதேனும் காத்திருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு இன்றைய எபிசோடில் பதில் கிடைக்க உள்ளது.
Karthigai Deepam : ரேவதி காட்டிய வீடியோவால் கொந்தளித்த சந்திரகலா... கார்த்தி - ரேவதியை பிரிக்க புதிய சதி!