அந்நியனாக இருந்த தம்பிகளை ரெமோவாக மாற்றிய ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

Published : Feb 24, 2026, 08:33 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் ப்ளான்படி கதிர் மற்றும் ஞானம் இருவரும் தங்கள் மனைவிகளிடம் நல்லவன் போல் நடிக்க ஆரம்பித்துள்ளனர். இதன்பின் என்ன ஆகிறது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Ethirneechal thodargiradhu serial

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தன் தம்பிகளுடன் சேர்ந்து புது பிளான் ஒன்றை போட்டுள்ள ஆதி குணசேகரன் அவர்கள் இருவரிடமும் தங்கள் மனைவிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறார். அதில் முதல் படியாக கதிரை வைத்து அறிவுக்கரசியை அந்த வீட்டை விட்டு வெளியே துரத்தி இருக்கிறார்கள். கதிர் ரூமை விட்டு வெளியே போக சொன்னதும் அறிவுக்கரசி விறுவிறுவென சென்று தன் பேக்கை எடுத்துக்கொண்டு வெளியேறினார். தன்னை வெளியே துரத்தி விட்ட கோபத்தில் இருக்கும் அறிவுக்கரசி அவர்களை சும்மா விடமாட்டேன் என்று கூறியபடி கேட்டினருகே முல்லையுடன் அமர்ந்திருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
கதிர் போட்ட உத்தரவு

ஆதி குணசேகரன் சாப்பிடாமல் இருந்ததால் அவருக்கான சாப்பாடு அவரது ரூமிலேயே சென்று கொடுத்துள்ளார் நந்தினி. அப்போது அவரிடம் மிகவும் பணிவாக பேசி இருக்கிறார் ஆதி குணசேகரன். இதை பார்த்து ஷாக்கான நந்தினி இவரா இப்படி பேசுகிறார் என தன் தங்கைகளிடம் வந்து கூறுகிறார். பின்னர் அனைவரும் படுக்க சென்ற நிலையில், கதிர் ஹாலில் வந்து பார்க்க அப்போது அங்கு கரிகாலன் மட்டும் இருக்கிறார். அவர் கதிரிடம் வெளியே அறிவுக்கரசி மற்றும் முல்லை குளிரில் நடுங்கியபடி இருக்கிறார்கள் அவர்களை உள்ளே அழைத்து வருமாறு சொல்ல, அதைக் கேட்டு கோபமடைந்த கதிர், ஒழுங்கு மரியாதையா போயிடு காலையில எழுந்து வந்து பார்க்கும்போது எவனும் இருக்கக் கூடாது என சொல்லிவிட்டு ரூமுக்குள் செல்கிறார்.

35
நந்தினியிடம் பாச மழை பொழியும் கதிர்

கதிரின் இந்த திடீர் ட்ரான்ஸ்பர்மேஷனை உண்மை என நம்பி அவரது ரூமிலேயே படுக்க செல்கிறார் நந்தினி. அப்போது இருவரும் பேசிக் கொள்கிறார்கள். கதிர் கட்டிலில் அமர்ந்திருக்க தயக்கத்துடன் ரூமில் நின்று கொண்டிருக்கும் நந்தினியிடம் நம்ம ஒண்ணா இருக்கணும் என நினைக்கிறேன் என்று கதிர் சொல்ல, அதைக் கேட்டு ஷாக்காகவும் நந்தினி, ஒண்ணா இருக்கணும்னா என்ன அர்த்தம் என கேட்கிறார். அதற்குக் கதிர் நாம் மீண்டும் புருஷன் பொண்டாட்டியா வாழனும் என சொல்கிறார். ஏற்கனவே கதிரை நம்பி பலமுறை ஏமாந்த நந்தினி, இந்த முறையும் அவர் விரித்துள்ள பாச வலையில் சிக்குவார் என்று தான் தோன்றுகிறது.

45
ஃபீல் பண்ணி பேசிய ஞானம்

மறுபுறம் ஞானமும் தன்னுடைய மனைவி ரேணுகா உடன் ரூமில் மனம் விட்டு பேசுகிறார். உன் வாழ்க்கையும் முக்கியம், நம்ம வாழ்க்கையும் முக்கியம். அதனால்தான் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என சென்டிமென்டாக பேசி லாக் செய்கிறார் ஞானம். இனி நம்முடைய மகளுடன் இந்த வீட்டிலேயே நாம் ஒன்றாக வாழலாம் என்றும் கூறுகிறார். உன்னுடைய அம்மா வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யாவை போன் போட்டு இங்கே வர சொல் என்றும் கூறியிருக்கிறார் ஞானம். அவரின் இந்த பேச்சை ரேணுகாவும் நம்ப வாய்ப்பு இருக்கிறது. அவனுங்க சொல்றபடி கேட்டு நடக்குமாறு விசாலாட்சி சொல்லி இருப்பதால் ரேணுகாவும் ஞானத்தின் பாச வலையில் சிக்க போகிறார் என்பது உறுதியாக தெரிகிறது.

55
அடுத்த பிளான் என்ன?

தான் சொன்னது படி தம்பிகள் அந்நியன் மோடில் இருந்து ரெமோவாக மாறி தங்கள் மனைவிகளிடம் பாச மழை பொழிந்து வருவதை அறிந்த ஆதி குணசேகரன் அடுத்து என்ன செய்யலாம் என பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறம் தங்களை வீட்டை விட்டு துரத்தி விட்ட ஆதி குணசேகரனை எப்படி பழி வாங்குவது என தூங்காமல் யோசித்துக் கொண்டிருக்கிறார் அறிவுக்கரசி. இதை எடுத்து என்ன நடந்தது? கதிர் மற்றும் ஞானம் மீது ரேணுகாவும் நந்தினியும் சந்தேகப்பட்டார்களா? இல்லை அவர்களை ஏற்றுக் கொண்டார்களா? அறிவுக்கரசி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories