பின்னர் என்னடா கதிர் இப்படி நடக்குது என ஆதி குணசேகரன் கேட்க, அதற்கு அவர் அண்ணேன் நீங்க கவலைப்படாதீங்க, எதுவும் நடக்காது. எல்லாமே பண்ணியாச்சு என சொல்கிறார். அருகில் இருந்த ஞானம், என்னடா பண்ணுன என கேட்க, அண்ணேன் அதை இவர்கிட்டலாம் சொல்லனும்னு அவசியம் இல்ல, இங்க எல்லாத்தையும் கேட்டுட்டு அங்கபோய் போட்டுகொடுத்தாலும், போட்டுக்கொடுத்திருவான் என கதிர் சொன்னதும், கோபமடைந்த ஞானம் கதிரின் சட்டையை பிடித்து அவனை அடிக்க பாய்கிறார்.
அவர்களை தடுத்து நிறுத்தும் ஆதி குணசேகரன், அவளுங்கள அடிச்சு காலிபண்ண சொன்னா, நீங்க சண்டைபோடுறீங்களே டா என கொந்தளிக்கிறார். இங்க பாரு ஞானம், அவன் என்ன செய்யுறானோ செய்யட்டும், நானும் இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன். ஆனா, நீ உன் பங்குக்கு அவளுங்கள பலவீனப்படுத்தனும். எப்பா ஞானம் நீ எங்கபக்கம் நிப்பியாப்பா என குணசேகரன் கேட்க, அண்ணேன் நான் உங்க கூட தான அண்ணேன் இருக்கேன் என சொல்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.