சந்திரகலாவிற்கு சீக்ரெட்டா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி ஷாக் கொடுத்த கார்த்திக் ராஜா!

Published : Aug 21, 2025, 11:43 PM IST

Karthik Raja Sent Legal Notice to Chandrakala : கார்த்திகை தீபம் 2 சீரியலில் சந்திரகலாவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கார்த்திக் ரகசியமாக விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

PREV
14

கார்த்திகை தீபம் 2 சீரியலில் கோயில் இடத்தை தங்களுக்கு சொந்தமாக்கி கொள்ள நடந்த போராட்டத்தில் கார்த்திக்கை எப்படியோ டிராமா பண்ணி ரேவதி காப்பாற்றிவிட்டார். அதில் எங்கு தனது அம்மாவிடம் கார்த்திக் மாற்றிவிடுவாரோ என்று பயந்து மருத்துவமனையிலிருந்து அம்மாவிற்கு போன் போட்டு அப்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார். இதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி உடனடியாக மருத்துவமனைக்கு புறப்பட்டு வந்து தன்னை யாரோ ஏமாற்றிவிட்டதாக நினைத்துக் கொண்டார். அதன் பின்னர், கார்த்திக் உள்பட அவரது அண்ணன்கள் பத்திரத்திரத்தில் கையெழுத்திட கோயில் இடம் சொந்தமானது.

24

இதைத் தொடர்ந்து எப்படி சாமுண்டீஸ்வரி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்? தன்னை காப்பாற்றியது யார் என்று கார்த்திக் அலசி ஆராயத் தொடங்கினார். இறுதியில் சிசிடிவி காட்சிகளை வைத்து ரேவதி தான் தனக்கு உதவி செய்தார் என்று அவர் கையில் அணிந்திருந்த மோதிரம் மூலமாக கார்த்திக் தெரிந்து கொண்டார். இதையடுத்து ரேவதியிடம் கேட்கிறார். அப்போது, ரேவதி, நீங்க என்னுடைய அத்தை பையன் என்று எனக்கு தெரியும். ஒரு நல்ல விஷயத்துக்காக தான் நீங்க பொய் சொல்லி வந்து இருக்கீங்க என்பதையும் நான் தெரிந்து கொண்டேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்

34

பின்னர், கார்த்திக் மீதான காதல் குறித்தும் வெளிப்படையாக சொல்ல, இதைக் கேட்டு கார்த்திக் ஷாக் ஆகி நிற்கிறார். இதைத் தொடர்ந்து ஒரு நல்ல மனைவி என்பவள், கணவரின் இன்ப துன்பம் மட்டுமின்றி கஷ்டம் நஷ்டத்திலேயும் பங்கேற்க வேண்டும். ஏதோ என்னால் முடிந்த உதவியை செய்தேன் என்றார்.

44

ஆனால், கார்த்திக்கிற்கு இதில் எல்லாம் உடன் பாடில்லை. அவர் ரேவதியை ஆஸ்திரேலியா சென்று வேலை பார்க்க சொன்னார். ஆனால், ரேவதிக்கு கார்த்திக்கை விட்டு செல்ல மனதில்லை. இதைத்தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடந்த டுவிஸ்டாக சந்திரகலாவிற்கு சிவனாண்டி விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவது போன்று கார்த்திக் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பிறகு நடக்கும் சம்பவம் பற்றி நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories