Karthik exposes Chandrakala to Chamundeshwari: கார்த்திகை தீபம் சீரியலில் எல்லா ஆதாரங்களையும் திரட்டிய கார்த்திக் அதை சாமுண்டீஸ்வரியிடம் காண்பிக்கவே சந்திரகலா அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சந்திராவிற்கு எதிராக கார்த்திக் எல்லா ஆதாரங்களையும் திரட்டி அதை சாமுண்டீஸ்வரியிடம் காண்பித்துள்ளார். இதைப்பார்த்த சந்திரகலா தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கதறினார். ஆனால் கார்த்திக் மற்றும் மயில்வாகனம் இருவரும் விடுவதாக இல்லை. கைரேகை நிபுணர்களை வர வைத்து சந்திரகலா கொண்டு வந்த 100 சவரன் நகையில் அவரது கை ரேகை இருக்கிறதா என்று அதிகாரிக்ள் பரிசோனை செய்தனர். இதில் ரேவதி, கார்த்திக், மயில்வாகனம், ரோஹிணி, சுவாதி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் கை ரேகை வைத்து பரிசோதனை செய்தனர்.
Karthigai Deepam Serial Today Episode Twist, கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் ட்விஸ்ட்
இதில் நகையில் இவர்கள் யாருடைய கைரேகையும் பதிவாகவில்லை. கடைசியாக இருந்தது சந்திரகலா மட்டும் தான். அவரை பரிசோதனை செய்ய அழைக்க அவர் முடியாது என்று மறுத்தார். எனினும் மயில்வாகனம் பிடிவாதமாக அவரை வற்புறுத்தவே பயந்து நடுங்கிய சந்திரா, இன்று எல்லாம் அவ்வளவு தான். நம்ம வசமாக மாட்டிக் கொண்டோமே என்று எண்ணிக் கொண்டு கை ரேகை வைத்தார். ஆனால் என்ன ஷாக் என்றால் அவரது கை ரேகை மேட்ச் ஆகிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரகலா என்ன சிக்க வைக்க இவன் ஏதோ பிளான் பண்ணி இப்படி செய்திருக்கிறான் என்று அழுது நாடகமாடினார்.
34
Karthik exposes Chandrakala to Chamundeshwari, சந்திரகலாவை அம்பலப்படுத்திய கார்த்திக்
அப்போது தான் மயில்வாகனம் வீடியோ ஆதாரத்தை காண்பித்தார். அதில், சண்முக பாண்டியனின் மனைவியுடன் சந்திரகலா பேசும் வீடியோ இடம் பெற்றிருந்தது. அதோடு, இது முழுக்க முழுக்க எனக்கு சொந்தமானது. இதை எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தேன் தெரியுமா? என்று கூறும் வீடியோ இருந்தது. அதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே சாமுண்டீஸ்வரியைத் தவிர மற்ற அனைவருக்குமே சந்திரகலாவிற்கு இதில் பங்கு இருப்பது தெரிந்திருந்தது.
44
Karthigai Deepam Latest Promo, கார்த்திகை தீபம் சீசன் 2 லேட்டஸ்ட் ப்ரோமோ
இந்த வீடியோ ஆதாரத்தை நம்ப வில்லை என்றால் கார்த்திக் அடுத்ததாக நான் எடுத்து வைத்திருக்கும் சிவனாண்டி உடன் பேசுவது போன்றும், அவருக்கு நகையை கொடுப்பது போன்றுமான வீடியோவை எடுத்து காண்பிப்பார். அப்போது சாமுண்டீஸ்வரி நம்புவாரா? இல்லையா என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.