ரேவதியை பழிவாங்க துடிக்கும் சந்திரகலா! கார்த்திக்கின் காதலர் தின சர்ப்ரைஸ்; கார்த்திகை தீபம் சீரியலில் மெகா ட்விஸ்ட்!

Published : Feb 13, 2026, 10:39 PM IST

Chandrakala revenge against Revathi : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1122ஆவது எபிசோடில் கார்த்திக் மற்றும் மயில்வாகனத்தை கண்டிப்பாக பழி வாங்குவேன் என்று சந்திரகலா சபதம் எடுத்துள்ளார்.

PREV
16
Karthigai Deepam Serial Today Episode

கார்த்திக்கின் அம்மா அபிராமி நாச்சியாரின் சிலை திறப்பு விழாவைத் தொடர்ந்து சேர்ந்த குப்பைகளை சந்திரகலா கூட்டி பெருக்கி செய்தார். கார்த்திக் உடனான பந்தயத்தில் தோல்வியடைந்த சந்திரகலா எப்படியாவது வீட்டை விட்டு எஸ்கேப் ஆகிவிடலாம் என்று நினைத்தார். ஆனால், மயில்வாகனம் ஒரு பக்கம், கார்த்திக் ஒரு பக்கம் மற்றும் ரோகிணி, ரேவதி, சுவாதி ஆகியோர் ஒரு பக்கம் என்று வீட்டைச் சுற்றிலும் நிற்க சந்திரகலாவால் எஸ்கேப் ஆக முடியவில்லை.

26
Karthik Valentine's Day surprise for Deepa

கடைசியில் அபிராமி நாச்சியாரின் சிலை இருக்கும் இடத்தை சுற்றி கூட்டி பெருக்கி சுத்தம் செய்தார். இதையெல்லாம் சந்திரகலாவின் கணவர் சிவனாண்டி நின்று வேடிக்கை பார்த்தார். அப்போது, மயில்வாகனம் மற்றும் கார்த்திக் இருவரையும் எப்படியாவது பழி வாங்குவேன் என்று சபதம் எடுத்தார். இதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவரால் துளி கூட நடக்க முடியவில்லை.

36
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

எப்படியோ தயங்கி தயங்கி நடந்து சென்றார். இதையெல்லாம் பார்த்து ரேவதி, மயில்வாகனம், ரோகிணி, சுவாதி ஆகியோர் சிர்த்து ரசிக்க மன வேதனை அடைந்த சந்திரகலா எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்பதில் வெறியாக இருந்தார். என்னதான் சந்திரகலாவின் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு பக்கம் இருந்தாலும் கார்த்திக் மற்றும் ரேவதியின் காதல் காட்சிகள் மட்டும் குறையாமல் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருந்தது.

46
சந்திரகலா பழிவாங்கும் சபதம்

அத்தை என்று தெரியாமல் அவரை அத்தை என்று கூப்பிட்டேன். ஆனால், அத்தை என்று தெரிந்த பிறகு அவரை அத்தை என்று உணர்வுப்பூர்வமாக கூப்பிட முடியாமல் போய்விட்டது என்று ரேவதி மனம் வருந்தினார். அதோடு, சிலை திறப்பு விழா மற்றும் சுமங்கலி பூஜை சிறப்பாக நடந்ததைத் தொடர்ந்து கார்த்திக்கை பாராட்டி அவரை கட்டிப்பிடித்துக் கொண்டார்.

56
கார்த்திக் ரேவதி காதலர் தின சர்ப்ரைஸ்

இந்த நிலையில் தான் வேலை பார்ப்பது போன்று ஆக்டிங் தான் செய்தார். அதுக்கே சந்திரகலாவால் கொஞ்சம் கூட நடக்க முடியாமல் கீழே விழுந்தார். கார்த்திக் உடனே தூங்க வந்தார். அப்போதும் கூட நீ ஒன்றும் என்னை தூக்கி விட வேண்டாம் என்றார். என்னை நீ கூட்டி பெருக்க சொல்லி அவமானப்படுத்த தான செஞ்ச. நீ என்னுடைய எதிரி என்று மனசுக்குள்ள ஆழமாக பதிந்துவிட்டது. அதனால், உன்னை கண்டிப்பாக பழி வாங்குவேன்.

66
Chandrakala revenge against Revathi

மேலும், உன்னை ஊரை விட்டு துரத்துவேன் என்று சபதம் போட்டார். இதற்கு ரேவதி, சித்தி உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இப்படித்தான் சபதம் போட்டு போட்டு தோற்றுக்கிட்டே இருக்கீங்க என்றார். இதற்கிடையில் நாளை காதலர் தினம் என்பதால் ரேவதிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் கார்த்திக் ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால், என்ன ஏற்பாடு என்று நாளை தெரியவரும். அதுவரையில் காத்திருந்து என்ன சர்ஃப்ரைஸ் கொடுக்கிறார் என்று பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories