இயக்குனராக தன்னால் திரையுலகில் வெற்றிக்கொடி நாட்ட முடியவில்லை என மன உளைச்சலில் இருந்த மாரிமுத்துவை, இயக்குனர் மிஷ்கின் அவர் இயக்கிய 'யுத்தம் செய்' படத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்தடுத்து பரியேறும் பெருமாள், மருது, சுல்தான், கூட்டத்தில் ஒருவன், பைரவா, போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.