மாரிமுத்து ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, திரையுலகின் மீது உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்தவர். அடித்து பிடித்து முதலில் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டு, இதை தொடர்ந்து ராஜ்கிரண் இயக்கிய படத்தில் துணை இயக்குனராக மாறினார். பின்னர் மணிரத்தினம், சீமான், எஸ் ஜே சூர்யா, வசந்த் போன்ற பிரபலங்களின் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியதோடு மட்டுமின்றி, இயக்குனராகவும் மாறினார்.