சீரியல் நடிகை திவ்யா வழக்கு..தலைமறைவான கணவர் அர்னவ்?

First Published Oct 14, 2022, 11:36 AM IST

ஆஜராகாமல் அர்னவ் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது.

Divya Shridhar love jihad

சன் டிவியில் பிரபல சீரியல் கேளடி கண்மணி  மூலம் அறிமுகமானவர்கள் திவ்யா ஸ்ரீ, ஆர்நவ் இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்ததாகவும், முன்னதாகவே திருமணம் செய்து கொண்டதாகவும் பல தகவல்கள் வெளியாகின. அது குறித்தான போட்டோக்களும் வைரலானது. ஆனால் இந்த ஜோடிகள் தாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. இது விளம்பரத்திற்காக எடுத்த புகைப்படம் என அப்போது தெரிவித்திருந்தனர்.

Divya Shridhar love jihad

திவ்யா ஸ்ரீ சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு இருந்த திவ்யா ஸ்ரீ தனக்கும் அருநவுக்கும் திருமணம் முடிந்ததாகவும், தங்களது பிள்ளையை விரைவில் வர வேற்க உள்ளோம், அதோடு இந்து மதத்தை சேர்ந்த திவ்யா ஸ்ரீ கணவர் அருநாவுக்காக முஸ்லிம் மதத்திற்கு மாறி உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...நயன்தாரா முதல் நாகார்ஜுனா வரை... சொந்தமாக விமானம் வைத்திருக்கும் தென்னிந்திய நடிகர், நடிகைகள் லிஸ்ட் இதோ

Divya Shridhar love jihad

இந்த நிலையில் திடீரென சென்னை அரசு மருத்துவமனைகள் அனுமதியான திவ்யா ஸ்ரீ தன்னை கணவர் அடித்து துன்புறுத்தியதால் கருக்கலையும் அபாயம் ஏற்பட்டதாக பரபரப்பு புகார் அளித்தார். இது குறித்து அர்னவ் மீது வழக்குப்பதியப்பட்டது. ஆனால் இதை முற்றிலும் மறுத்ததோடு திவ்யா மீது அடுக்கடுக்கான புகார்களை கொடுத்தார் அர்னவ்.

Divya Shridhar love jihad

அதோடு அவர் ஒரு சைக்கோ அதனால்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் என பல வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார். ஆனால் இது எதுவுமே பலிக்கவில்லை. அர்னவ் மீது கர்ப்பிணி பெண்ணை தாக்கியதற்காக போலீசார் வழக்கு பதிந்துள்ளார். சம்மனும் அனுப்பட்டுள்ளது. ஆனால் ஆஜராகாமல் அர்னவ் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்... பொறி பொறி பொறி பறக்க ஆட்டம் போடும் ஆதித்த கரிகாலன்... பொன்னியின் செல்வன் ‘சோழா சோழா’ பாடல் வீடியோ இதோ

click me!