கடந்த கால காயங்கள்! செல்லமே செல்லமே தொடரில் விஜி அழுததற்கான உண்மையான காரணம் என்ன? நெகிழ்ச்சியான எபிசோட்!

Published : Feb 17, 2026, 06:43 PM IST

Chellame Chellame Viji Crying For her Past Memories: செல்லமே செல்லமே சீரியலில் இன்றைய எபிசோடில் விஜி தனது பழைய நினைவுகளை எண்ணி ஃபீல் பண்ணும் காட்சிகள் காண்போரை கண் கலங்க செய்துள்ளது.

PREV
15
செல்லமே செல்லமே சீரியல்

கடந்த காலத்தை நினைத்து விக்ரம் செய்த கொடுமைகளையும் விக்ரமின் அம்மா செய்த சூழ்ச்சிகளையும் கண்டு வருந்தும் விஜி இந்த எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

25
தேனிக்கு புறப்பட்ட விஜி

செல்லமே செல்லமே சீரியலில் விக்ரமை பார்த்ததும் தேனிக்கு மீண்டும் கிளம்புவதாக சொன்னார் விஜி. ஆனால் நிலா இங்கதான் இருக்க வேண்டும் என்று அடம்பிடித்ததாலும் தன் அம்மாவின் பேச்சு வார்த்தையாலும் மீண்டும் சென்னையிலேயே இருக்க கட்டாயப்படுத்தினர். நிலாவும் மனவலிமை தாங்க முடியாமல் மயக்கம் அடைந்தது மருத்துவமனைக்குச் சென்று வந்த பிறகு இங்கேயே இருக்கப் போவதாகவோ கூறி அம்மாவிடம் சத்தியம் வாங்கினார்.

35
Viji and Vikram fight in Chellame Chellame seri

உண்மையைக் கேட்ட பாக்கியலட்சுமி: விஜயின் அம்மாவான பாக்கியலட்சுமி குழந்தைக்காக தேனியில் இருந்து வந்த. சென்னையில் இருந்து இப்போ திரும்பி தேனிக்கே போகணும்னு சொல்றியே. எதுக்கு ஒரு காரணம் மட்டும் தான் இருக்கும். நீ ஏன் அங்க போகணும்னு சொல்ற என்று பேச்சுவார்த்தையில் மூலம் விஜியின் மடக்குகிறார் பாக்யலட்சுமி. உண்மையை வெளியே சொல்ல முடியாமல் அமைதியாகவே இருக்கிறார் விஜி. உன் புருஷனா நீ பார்த்தியா அதனால தான் நீங்க போகணும்னு சொல்றியா என்று உண்மையை உடைக்கிறார் பாக்கியலட்சுமி அதனைக் கேட்டு அதிர்ச்சியில் இருக்கிறார் விஜி.

45
கடந்த காலத்தை நினைத்து பார்க்கும் விஜி:

விஜியை விக்ரமின் அம்மா ஒரு வேலைக்காரி என்று சொல்ல எதுக்கு உங்க அம்மா என்னைய வேலைக்காரி என்று சொல்றாங்க என்று விக்ரமிடம் கோபப்படுகிறார் விஜி.அதற்கு விக்ரம் எங்க அம்மா அப்படி தான் சொல்லுவாங்க நீ ஒரு வேலைக்காரி தான் என்று விஜியை அடிக்கிறார். அதற்கு விஜியும் விக்ரமையும் திரும்பி அடிக்கிறார் அப்பொழுது நீ என்னையவே அடிக்கிறியா என்று இனிமேல் என் குழந்தைகள் உன்னிடம் இருக்காது என்றும் உன்னை நான் டைவர்ஸ் கொடுக்கிறேன் என்றும் கோபத்துடன் குழந்தைகளை தூக்கிச் செல்கிறார் விக்ரம். 

55
Chellame Chellame Serial

அதன் பிறகு டைவர்ஸ் பெற்று நீதிபதி குழந்தைகள் விஜியிடம் தான் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.அதன் பிறகு விஜி கையில் இரண்டு குழந்தைகளையும் விக்ரம் இருந்து பெற்று போலீசார் குடுக்கின்றனர். அதனை பிடிக்காமல் விக்ரம் விஜிக்கு தெரியாமல் ஒரு குழந்தையை மட்டும் தூக்கி செல்கிறார் விக்ரம்.இந்த பழைய கதையை நினைத்துப் பார்க்கிறார் விஜி மிகவும் வருத்தத்துடனும் கண்ணீருடனும் வருந்துகிறார். இத்துடன் இந்த சீரியல் முடிவடைந்தது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories