Karthigai Deepam : வீட்டை அடித்து நொறுக்கிய சாமுண்டீஸ்வரி... பரமேஸ்வரி பாட்டி வீட்டில் கார்த்திக் - ரேவதிக்கு நடந்தது என்ன?

Published : Aug 14, 2026, 01:00 PM IST

Karthigai Deepam Serial 14 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கும் ரேவதிக்கும் பரமேஸ்வரி பாட்டி வீட்டில் தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Karthigai Deepam Serial Today Episode

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். தொடர்ந்து பல எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்ந்து வரும் இந்தத் தொடரில், இன்றைய எபிசோடும் பரபரப்புக்கும் உணர்ச்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கப் போகிறது. நேற்றைய எபிசோடில் கார்த்திக்கும் ரேவதியும் பரமேஸ்வரி பாட்டியை சந்திக்க புறப்பட்ட நிலையில், இன்று அவர்கள் அங்கு செல்வதால் புதிய சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

Karthigai Deepam : சந்திரகலாவை பளார் என அறைந்த ரேவதி... துப்பாக்கியால் மிரட்டிய சாமுண்டீஸ்வரி!

24
கோபத்தின் உச்சத்தில் சாமுண்டீஸ்வரி!

ஒருபக்கம் சாமுண்டீஸ்வரி கடும் ஆத்திரத்தில் வீட்டில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார். தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீட்டில் இருந்த பொருட்களை தூக்கி வீசி உடைக்கும் அளவுக்கு அவரது ஆவேசம் செல்கிறது. அவரை அமைதிப்படுத்த குடும்பத்தினர் முயற்சி செய்தாலும், சாமுண்டீஸ்வரியின் கோபம் தணிந்தபாடில்லை. அவரது இந்த ஆவேசத்திற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன, இனி அவர் எடுக்கப்போகும் முடிவு என்ன என்பது சீரியலில் முக்கிய திருப்பமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Karthigai Deepam : ரேவதியின் கேள்விகளால் ஆடிப்போன சாமுண்டீஸ்வரி... மறைக்கப்பட்ட காதல் ரகசியம் அம்பலம்

34
கார்த்திக் - ரேவதிக்கு தடபுடல் வரவேற்பு

இதற்கிடையே கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் ஒன்றாக பரமேஸ்வரி பாட்டியின் வீட்டிற்கு வந்து சேருகின்றனர். அவர்களை பார்த்ததும் பரமேஸ்வரி பாட்டி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். இருவரையும் அன்புடன் வரவேற்பதுடன், ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார். தொடர்ந்து ரேவதியை பூஜை அறைக்கு அழைத்துச் செல்லும் பரமேஸ்வரி, அங்கு விளக்கேற்றச் சொல்கிறார். ரேவதியும் பக்தியுடன் விளக்கேற்ற, அந்தக் காட்சி குடும்பத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

Karthigai Deepam : கார்த்திக்கின் பிளான் தெரியாமல் சவால்விட்ட சாமுண்டீஸ்வரி... ரேவதி ரிட்டர்ன் ஆனது ஏன்?

44
பாட்டி வீட்டிற்கு வரும் மயில்வாகனம் - ரோகினி

இந்நிலையில் பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு மயில்வாகனமும் ரோகினியும் வருகின்றனர். கார்த்திக் மற்றும் ரேவதியை அவர்கள் சந்திக்கும் சூழல் உருவாகிறது. ஏற்கனவே பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், இவர்களின் வருகை அடுத்த கட்டத்தில் என்ன மாதிரியான பிரச்சனையை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒருபுறம் சாமுண்டீஸ்வரி கோபத்தின் உச்சியில் இருக்க, மறுபுறம் கார்த்திக் - ரேவதி பரமேஸ்வரி பாட்டியின் வீட்டில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளனர்.

இதனால் இரு பக்கத்திலும் நடக்கப்போகும் சம்பவங்கள் சீரியலின் கதையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தலாம். சாமுண்டீஸ்வரியின் ஆவேசம் எங்கே சென்று முடியும்? கார்த்திக் - ரேவதியை பரமேஸ்வரி பாட்டி தொடர்ந்து எப்படி நடத்தப் போகிறார்? மயில்வாகனம் மற்றும் ரோகினியின் வருகையால் என்ன அதிர்ச்சி காத்திருக்கிறது? என்பதை தெரிந்துகொள்ள இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் எபிசோடை பார்க்கலாம்.

Karthigai Deepam : ரேவதியின் பாஸ்போர்ட் மாயம்... கார்த்திக்கை வீழ்த்த எதிரிகள் போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?

Read more Photos on
click me!

Recommended Stories