Karthigai Deepam Serial Twist : கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கின் பிளானிற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக சாமுண்டீஸ்வரி முக்கிய முடிவை எடுத்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில், ரேவதிக்காக கார்த்திக் வளைகாப்பு விழா நடத்தியது சாமுண்டீஸ்வரிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் குடும்பத்திற்குள் அடுத்தகட்ட பரபரப்பு வெடிக்க உள்ளது. ரோகிணி தனது விருப்பத்தின் பேரில்தான் கார்த்திக் வீட்டிற்குச் சென்றதாக சாமுண்டீஸ்வரியிடம் நேரடியாக தெரிவிக்கிறாள். இதனால் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரியின் ஆத்திரம் மேலும் அதிகரிக்கிறது.
இதற்கிடையில் ரோகிணியுடன் மயில்வாகனமும் வீட்டிற்கு வருகிறார். அப்போது, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றுவது கணவனாகிய தனது பொறுப்பு என்று கூறி சாமுண்டீஸ்வரிக்கு மயில்வாகனம் பதிலடி கொடுக்கிறார். இதனால் வீட்டில் மீண்டும் வாக்குவாதம் உருவாகும் சூழல் ஏற்படுகிறது. மறுபுறம், தனது ஆசையை புரிந்துகொண்டு வளைகாப்பு விழாவை சிறப்பாக நடத்திய கார்த்திக்கிற்கு ரேவதி மனதார நன்றி கூறுகிறாள். இதையடுத்து, தங்களுக்கும் விரைவில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற தனது ஆசையை கார்த்திக்கிடம் தெரிவிக்கிறாள்.
ரேவதியின் வார்த்தைகளைக் கேட்டு மகிழும் பரமேஸ்வரி பாட்டி, கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததும் நல்லது நடக்கும் என்று நம்பிக்கையுடன் வாழ்த்துகிறார். அதன்பிறகு கோவில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் குறித்து குடும்பத்தினர் ஆலோசிக்கின்றனர். நான்கு எல்லைகளிலும் கருப்பசாமி விளக்கு ஏற்றும் முக்கிய நிகழ்வுக்கு ராஜராஜன் வர வேண்டும் என்று பேசப்படுகிறது. உடனே கார்த்திக், மாமாவை தானே அழைத்து வருவதாக உறுதி அளிக்கிறான். ஆனால் இந்த விஷயம் சந்திரகலா மூலம் சாமுண்டீஸ்வரியின் காதுகளுக்கு சென்றுவிடுகிறது.
கார்த்திக் மீது ஏற்கனவே கடும் கோபத்தில் இருக்கும் அவர், “என்ன நடந்தாலும் ராஜராஜனை அங்கு அனுப்ப மாட்டேன்” என்று திட்டவட்டமாக கூறுகிறார். இதனால் கார்த்திக் கொடுத்த வாக்கை எப்படி நிறைவேற்றப் போகிறார்? ராஜராஜன் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வருவாரா? கார்த்திக்கிற்கு எதிராக சாமுண்டீஸ்வரி எடுக்கும் இந்த முடிவு குடும்பத்தில் என்ன மாதிரியான பிரச்சனையை ஏற்படுத்தப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இன்றைய ‘கார்த்திகை தீபம்’ எபிசோடை தவறாமல் பாருங்கள்!