பெங்களூரை சேர்ந்தவரான ரச்சிதா, தமிழில் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் அறிமுகமான ரச்சிதா, பின்னர் சரவணன் மீனாட்சி தொடரில் நடிகர் ரியோவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்கள் மனதில் மீனாட்சியாகவே மாறிவிட்டார். அந்த அளவுக்கு அவருக்கு இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது.