வீட்டின் உள்ளே அழைத்து சென்று போலீஸிடம் அனைத்து டாக்குமெண்டுகளையும் அப்பத்தா கொடுத்த நிலையில், இந்த வழக்கில் குழப்பம் இருப்பதால் தற்போதைக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என போலீஸ் கிளம்பிச் செல்ல, அதன்பின்னர் ஜனனி, அப்பத்தாவை மாடிக்கு அழைத்து சென்று பேசுகிறார். அப்போது பார்கவியை பார்த்து, எவ்வளவோ கஷ்டத்தை தாண்டி நீ வந்திருக்க, வந்தது முக்கியமில்லை, எதையும் நீ விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என சொல்கிறார்.
அப்போது தங்கள் தமிழ் சோறு ஃபுட் டிரக் திறப்பு விழாவுக்கு நீங்க கண்டிப்பா வரணும் அப்பத்தா என ஜனனி கேட்க, அதற்கு, அவர் நான் வர்றதாவே இருக்கட்டும், உங்க கடையை யார் திறந்து வைப்பார்கள் என கேட்டு ஜனனியை லாக் பண்ணுகிறார்.