அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பரணி மற்றும் ரத்னா ஆகியோர் வெங்கடேஷை தேடி கண்டுபிடித்து கல்யாணத்துக்கு நாள் குறித்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பரணி மற்றும் ரத்னா ஆகியோர் வெங்கடேஷை தேடி கண்டுபிடித்து கல்யாணத்துக்கு நாள் குறித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
24
Zee Tamil Anna serial
அதாவது ஷண்முகம் நடந்து வந்து கொண்டிருக்கும் போது எதிரே முத்துப்பாண்டி கீழே வேலை செய்யும் போலீஸ் காரர் முப்பிடாதி வர அவரிடம் துப்பாக்கியை வாங்கி சுடப்போவது போல் பார்க்க அவர் அதில் குண்டு இருக்கு என பதற ஷண்முகம் துப்பாக்கியை எடுத்து கொண்டு வந்து சௌந்தரபாண்டி வீட்டில் இறங்குகிறான். துப்பாக்கி முனையில் மிரட்டி முத்துபாண்டியை சுட ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆகுகிறான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
உடனே அவன் துப்பாக்கியை எடுத்து சண்முகத்தை சுட போக குறி தவறி சனியனில் கையில் சுட்டு விடுகிறான். இனிமே என் தங்கச்சி வாழ்க்கையில் தலையிட்டா அவ்வளவு தான் என வார்னிங் கொடுத்து விட்டு ஷண்முகம் வெளியே வர சனியன் வலியில் என்னை காப்பாத்துங்க என கதற முத்துப்பாண்டி அதெல்லாம் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக முடியாது. யார் சுட்டது என்ன என்பது குறித்து விசாரித்தால் என்னுடைய வேலை போய்டும் என சொல்ல சனியன் அப்போ என் உயிரை யார் காப்பாத்துவா என்று கேட்க பரணியை கூப்பிட்டு கட்டு போட சொல்வதாக சொல்கிறான்.
44
Anna serial Today Episode
பிறகு சிவபாலன் இங்கே வீட்டிற்கு வந்து நடந்ததை சொல்லி பரணியை கூட்டி போக அவள் இது போலீஸ் கேஸ். போலீஸ் ஸ்டேஷனலில் தகவல் கொடுத்து தான் சிகிச்சை கொடுக்கணும் என சொல்ல முத்துப்பாண்டி அப்படி பண்ணா என் வேலை போய்டும், கட்டு போடு என மிரட்ட பரணி முடியாது என ஷாக் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.