இந்த அறிவிப்பு வெளியான ஒரே வாரத்தில், அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அவர் எட்டி உதைத்ததில் தனது வயிற்றில் இருக்கும் கரு கலையும் அபாயம் ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் இருந்தபடி நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து திவ்யாவின் குற்றச்சாட்டு அர்னவ் மறுப்பு தெரிவித்தார்.
பின்னர் இருவரும் மாறி மாறி ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டு வந்தனர். இதையடுத்து திவ்யா கொடுத்த புகாரின் பேரில் அர்னவ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போரூர் போலீசார் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த அர்னவ்வை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர்.
இதையும் படியுங்கள்... bigg boss tamil : பிக் பாஸ் 6 இருக்கட்டும்..முந்தைய வின்னர்ஸ் இப்ப என்ன பன்றாங்க தெரியுமா?