Train Speed : இரவில் ரயில் ஏன் ஸ்பீடாக போகுது தெரியுமா? ராத்திரியில மட்டும் வேகம் அதிகரிக்க காரணம் என்ன? பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான ரகசியங்கள்!

Published : Apr 19, 2026, 04:52 PM IST

Why Trains Run Faster at Night? : ரயில் பயணத்தின்போது, பகல் நேரத்தை விட இரவில் ரயில் அதிவேகமாக செல்வது போல நமக்குத் தோன்றும். இதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளன. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
Why Trains Run Faster at Night?

பகல் நேரத்தை விட இரவில் ரயில் பயணம் செய்யும்போது, ரயில் அதிவேகமாக செல்வது போல நமக்கு தோன்றும். ஜன்னல் கம்பிகள் காற்றில் வேகமாக அடித்துக்கொள்வதும், தண்டவாளத்தின் சத்தம் மாறுவதும் ஒரு த்ரில்லிங்கான அனுபவத்தை கொடுக்கும். உண்மையிலேயே இரவில் ரயிலின் வேகம் அதிகரிக்குமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?என்ற சந்தேகம் நமக்கு இருக்கும். இந்த வேகத்திற்குப் பின்னால் உள்ள மூன்று முக்கிய காரணங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

25
விஷுவல் இல்யூஷன்

ரயில் வேகமாக செல்வது போல நமக்குத் தோன்றுவதற்கு முக்கிய காரணம், நம் கண்களே நம்மை ஏமாற்றுவதுதான். இதை அறிவியல் மொழியில் 'விஷுவல் இல்யூஷன்' (Visual Illusion) என்று சொல்வார்கள். பகல் நேரத்தில், நம் கண்கள் தூரத்தில் உள்ள மலைகள், மரங்கள் மீது கவனம் செலுத்தும். அதனால் அவை மெதுவாக நகர்வது போல தோன்றும். ஆனால், இரவில் தூரத்து பொருட்கள் தெரியாது. ரயிலுக்கு அருகில் உள்ள மின்கம்பங்கள், விளக்குகள் மட்டுமே தெரியும். அருகில் உள்ள பொருட்கள் வேகமாகப் பின்னோக்கிச் செல்வதால், ரயில் ராக்கெட் வேகத்தில் செல்வதாக நம் மூளைக்கு ஒரு சிக்னல் செல்கிறது.

35
ரயில்வே சிக்னல் விளக்குகள்

பகல் நேரங்களில், வெயில் காரணமாகவோ அல்லது மரங்களுக்குப் பின்னாலோ சிக்னல்கள் இருப்பது லோகோ பைலட்டுக்கு தெளிவாகத் தெரியாது. சிக்னல் சிவப்பா அல்லது மஞ்சளா என்பதை உறுதி செய்யும் வரை, அவர்கள் ரயிலின் வேகத்தைக் குறைப்பார்கள். ஆனால், இரவு நேரத்தில் ரயில்வே சிக்னல் விளக்குகள் மிகவும் பிரகாசமாக, சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தே தெளிவாகத் தெரியும். பச்சை சிக்னல் தூரத்திலிருந்தே தெரிவதால், லோகோ பைலட்டுக்கு முழு நம்பிக்கை வந்துவிடும். அதனால், அவர் பிரேக் மீது கை வைக்காமல், ரயிலை அதன் அதிகபட்ச வேகத்தில் இயக்குவார்.

45
காஷன் ஆர்டர்

பகல் நேரங்களில் தண்டவாளத்தில் பராமரிப்பு மற்றும் வெல்டிங் பணிகள் நடக்கும். அப்போது, 'காஷன் ஆர்டர்' (Caution Orders) இருப்பதால் ரயிலை மெதுவாக இயக்க வேண்டியிருக்கும். மேலும், பகலில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் தண்டவாளத்தைக் கடப்பதால், லோகோ பைலட் கவனமாக வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், இரவு 10 மணிக்கு மேல் பராமரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டு, தண்டவாளம் காலியாக இருக்கும். எந்த தடைகளும் இல்லாததால், ரயில் தனது அதிகபட்ச வேகமான மணிக்கு 110 முதல் 130 கி.மீ. வேகத்தில் தடையின்றி வேகமாச் செல்லும்.

55
மூன்று அறிவியல் காரணங்கள்

நம் மூளை உருவாக்கும் பார்வை மயக்கம், தெளிவான சிக்னல்கள், மற்றும் தடைகளற்ற காலி தண்டவாளம் இந்த மூன்று காரணங்களால் தான் இரவு நேர ரயில் பயணம் நமக்கு அதிவேகமாகவும், த்ரில்லிங்காகவும் இருக்கிறது. எனவே, அடுத்த முறை நீங்கள் இரவில் ரயிலில் செல்லும்போது, அந்த வேகத்தைப் பார்த்து பயப்படாமல், இந்த அறிவியலை நினைவில் கொள்ளுங்கள்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories