ஒருவர் இத்தனை சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.. மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்!

First Published | Dec 17, 2024, 2:56 PM IST

புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின்படி, ஒரு நபர் அதிகபட்சமாக குறிப்பிட்ட அளவிலான சிம் கார்டுகளை வைத்திருக்க முடியும். விதிகளை மீறினால், 50,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

Multiple Sim Cards

உங்கள் பெயரில் பல சிம் கார்டுகள் உள்ளதா? சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். சிறைத்தண்டனையும் கிடைக்கலாம்.

Sim Card Limit

சிம் கார்டு தொடர்பான புதிய செய்தி சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வாடிக்கையாளராக நீங்கள் எத்தனை சிம் கார்டுகளை வைத்திருக்கலாம் என்பதற்கான புதிய விதி வெளியிடப்பட்டுள்ளது.

Tap to resize

Telecommunications Act

இந்த விதியை மீறினால் 2 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும். கிராண்ட் தோர்ன்டன் இந்தியாவின் கூட்டாளர் நீதின் அரோரா, ஒரு நபருக்கு அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் வைத்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

Telecommunications Law 2023

ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு உரிமம் பெற்ற சேவைப் பகுதிகளில், ஒரு நபர் அதிகபட்சமாக ஆறு சிம் கார்டுகளை வாங்க முடியும். 2023 ஆம் ஆண்டின் புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் இந்த விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

Penalties

நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி சிம் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு முதல் முறை குற்றம் செய்தால் 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

SIM cards

நீங்கள் ஒன்பதுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கவில்லை என்றாலும், வேறு யாராவது உங்கள் பெயரில் சிம் கார்டுகளை வாங்கியிருந்தாலும், நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

Sanchar Saathi portal

இது குறித்து மேலும் அறிய Sanchar saathi portal (+தமிழ்+) -ஐப் பார்வையிடவும். கூடுதல் சிம் கார்டுகளை வாங்க வேண்டாம். 

Sim card rules

இதனால் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும். 9க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் வைத்திருந்தால் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும். அபராதம் முதல் சிறைத்தண்டனை வரை விதிக்கப்படலாம்.

கல்லூரி மாணவர்களுக்கான சிறந்த 5 பைக்குகள்; 2024ன் முழு லிஸ்ட் இதோ!

Latest Videos

click me!