பிஎஸ்என்எல்
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இதில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 3ஜி, 4ஜி என்பதையும் தாண்டி 5ஜி சேவை வரை வந்து விட்டன. ஆனால் அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி சேவயை தான் வழங்கி வருகிறது.
ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியவுடன் அங்கு இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் சாய்ந்தனர். ஆனால் அதன்பிறகு திடீரென பிஎஸ்என்எல்லில் இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் வெளியே சென்றனர். மோசமான நெட்வொர்க் மற்றும் 4ஜி கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.