TamilNadu Weatherman: சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து எப்போது விடுதலை? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன தகவல்!

First Published Sep 14, 2024, 2:54 PM IST

Tamilnadu Weatherman: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டிவதைத்தாலும் இரவு நேரங்களில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். 

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 103 டிகிரி வெயில் சுட்டெரித்தது. பாளையங்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் 102 டிகிரி, சென்னை, ஈரோடு, கரூர், மற்றும் காரைக்கால், புதுச்சேரியில் 100 டிகிரி வெப்ப நிலை பதிவாகியிருந்தது.

Latest Videos


சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 103 டிகிரி வெயில் சுட்டெரித்தது. பாளையங்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் 102 டிகிரி, சென்னை, ஈரோடு, கரூர், மற்றும் காரைக்கால், புதுச்சேரியில் 100 டிகிரி வெப்ப நிலை பதிவாகியிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தமிழகத்தில் வெயில் எப்போது குறையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக என்ற தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக   தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இன்னும் சில நாட்களுக்கு வெப்பம் அதிகமாகவே இருக்கும். விரைவில் நிவாரணம் கிடைக்கும் என பதிவிட்டுள்ளார். 

click me!