TN School Reopen: வானிலை மையம் கொடுத்த ரிப்போர்ட்! பள்ளிகள் திறப்பு ஒருவாரம் தள்ளிப்போகிறது? அறிவிப்பு வெளியாகிறது!

Published : May 26, 2026, 01:52 PM IST

School Reopen: தமிழகத்தில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால், ஜூன் 1 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து வானிலை மையத்தின் அறிக்கையை பெற்று, முதலமைச்சர் தலைமையில் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

PREV
14
வாட்டி வதைக்கும் கோடை வெயில்

தமிழகம் முழுவதும் கோடை வெயில் மட்டுமின்றி வெப்ப அலை கடுமையாக வீசி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மத்தியில் தொடங்கிய வெயிலின் தாக்கம் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. வெளியில் செல்வதற்கு பயந்து பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வரும் நாட்களிலும் ஜூன் முதல் அல்லது 2ம் வாரம் வரை வெயில் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

24
பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க கோரிக்கை

இந்நிலையில் தமிழகத்தில் கோடை விடுமுறை நிறைவடைந்ததைத் தொடர்ந்து வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் சூழலில், மாணவர்களின் உடல்நலன் குறித்த அச்சம் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

34
முதலமைச்சர் விஜய்யுடன் ஆலோசனை

அந்த வகையில் வெயிலின் தாக்கம் தொடர்பாக அறிவியல் பூர்வமாக கருத்துகளை வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து கேட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வானிலை மையம் தங்களின் அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்திருந்தது. வானிலை மைய அறிக்கை அடிப்படையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் முதலமைச்சர் விஜய்யுடன் ஆலோசனை ஈடுபட்டுள்ளனர்.

44
பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது

இந்த ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பள்ளி திறப்பு ஒருவாரத்திற்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories