அந்த புகாரின் பேரில் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு அதாவது எஸ்சி/எஸ்டி சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து தமிழக அரசு சவுக்கு மீடியாவில் நடத்த விடாமல் முடக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறது. இதுவரை ஏறக்குறைய 50 வழக்குகள் என் மீதும், சவுக்கும் மீடியா குழுவினர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் உதவியோடு மீண்டும் மீண்டும் அந்த வழக்குகளை உடைத்துவெளியே வந்து கொண்டிருக்கிறோம். தொடர்ந்து வெளியே வந்த மக்களுக்காக பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போது கைது செய்யப்படுவதற்கான காரணம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நீதிமன்றங்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தான் மற்றும் மாலதி, தனது குழுவினரை கைது செய்ய உள்ளனர்.