திமுகவை 'கை' க‌ழுவும் காங்கிரஸ்.. அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகும் பலமான கட்சிகள்.. அடித்து சொன்ன இபிஎஸ்!

Published : Jan 15, 2026, 01:45 PM IST

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், தினமும் போராட்டம் நடைபெறுகிறது. தமிழக மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. திமுக ஆட்சியை மக்கள் புறக்கணித்து விட்டனர் என்று இபிஎஸ் சரமாரியாக விமர்சித்துள்ளார்.

PREV
13
பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி தானே மாட்டு வண்டி ஓட்டிச்சென்றதை அனைவரும் பார்த்து வியந்தனர். 

இந்த பொங்கல் விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மேலும் திமுக கூட்டணி ஆட்டம் காண்பதாகவும், அதிமுக கூட்டணிக்கு பலமாக கட்சிகள் வரப்போவதாகவும் அவர் கூறினார்.

23
திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு மிக மோசம்

இது தொடர்பாக பேசிய இபிஎஸ், ''திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. மாணவர்களின் போதைப்பழக்கம் அதிகரித்து விட்டது. போதைப்பழக்கம் அதிகரித்ததால் வன்முறை அதிகரித்து விட்டது. தமிழக டிஜிபி ஓய்வு பெற்ற பிறகு நிரந்த டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. நிரந்தர டிஜிபி இல்லாமல் எப்படி சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

திமுகவை மக்கள் புறக்கணித்து விட்டனர்

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், தினமும் போராட்டம் நடைபெறுகிறது. தமிழக மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. அதிமுக ஆட்சியில் 2 முறை வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக ஆட்சியை மக்கள் புறக்கணித்து விட்டனர். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். அடுத்த ஆண்டு பொங்கல் விழாவில் அதிமுக ஆளும் கட்சியாக பங்கேற்கும்.

33
அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள்

அதிமுக கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் நழுவி செல்ல இருக்கிறது. ஆனால் அதிமுக கூட்டணி பலமாக உள்ளது. மேலும் சில பலமான கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர உள்ளன. ஆகவே அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரும் வெற்றியை பெறப்போகிறது'' என்று தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories